Monday 15 January 2018

திராட்சை......



கொத்து கொத்தாய் தொங்குதம்மா

திராட்சையுமே பந்தலிலே

சொட்டு சொட்டாய் ஊறுதம்மா

எச்சிலுமே நாவினிலே

கேட்க பிடிக்க காவற்காரர்

யாருமில்லை தோட்டத்திலே

பறிக்க கையிரண்டும் ஏங்கையிலே

மனசு ஏனோ தடுக்குதம்மா

புளிக்கும்னு பயமில்லே நெஞ்சினிலே

எண்டோசல்பானில் முங்கி எழுந்த

திராட்சை அழகாய் மின்னுகையிலே

“கருக்”ன்னு இருக்கு மனசுக்குள்ளே

நாட்டுப்பழம் வீட்டுப்பழம் எதிலும்

எண்டோ சல்பான் இருக்கையிலே

பூவுக்குள் புகுந்தே வினையாகுது

சுவைக்கும் திராட்சையிலே

சூல்கொண்ட அழகுப் பெண்ணே

திராட்சை நீ தவிர்த்திடு கண்ணே

மற்றவர் சுவைக்கலாம் மனம்போல

உப்புக் கரைந்த நீரில் மஞ்சள்

கலந்து தெளித்த பின்னே…..

மண்ணை கெடுக்கும் உரம்

நம்மை கெடுக்கும் உரம்

வேண்டாமென நீ முடிவெடு

நாளும் நாடு செழித்திடும்

வலம் நிறைய கொடுத்திடும்.

=கோ.லீலா.

No comments:

Post a Comment