Monday 29 January 2018

புதியதோர் உலகை பயிர் செய்வோம்.





நல்லதோர் உலகைப்

பயிர் செய்ய போகிறேன்

பதவியை துறந்த

பணத்தினை மறந்த

நேயத்துடன் வாழும்

மனிதர் நிறைந்த

உலக விதையினை

விதைத்திடப் போகிறேன்

அறத்தை உரமாக்கி

அன்பை நீராக்கி

நேர்மையால் உழவோட்டி

புதியதோர் உலகை

விதைக்கப் போகிறேன்

பதராகிப் போகாமல்

குணமேந்தும் நெல்லாக்கி

புதியதோர் உலகை

பயிராக்க போகிறேன்

கெஞ்சும் நிலைப் போக்கி

கஞ்சி ஆக்கும் மனிதரை

கொண்ட உலகை விதையென

விதைக்கப் போகிறேன்

கணினி விடுத்து

கலப்பை மதிக்கும்

மூளை தாங்கிய உலகை

விதைக்கப் போகிறேன்

விளையாத விதையகற்றி

நாளும் விளையும்

உலகை விதைக்க போகிறேன்

உணவாக்க மட்டுமில்லை

உலகாக்கவும் அறிந்த

உழவன் நான்

உலகை விதைக்க போகிறேன்

புதியதோர் உலகை

பயிராக்க போகிறேன்.





-கோ.லீலா

No comments:

Post a Comment