Monday 15 January 2018

கவிதைகளின் மாநாடு...

கவிதைகள் யாவும் மாநாடு போட்டன
சிறந்த கவிஞன் யாரென்று கேட்டன
காதல் கவிதை தன்னை எழுதியவரே
அன்புக் கொண்ட சிறந்தவர் என்றது
இயற்கை கவிதை தன்னை எழுதியவரே
ரசிகத்தன்மை கொண்ட சிறந்தவர் என்றது
மூடநம்பிக்கை போக்கும் கவிதையோ எம்
முற்போக்காளர் கவிஞரே சிறந்தவர் என்றது
சமூக அவலம் பேசும் புரட்சிக் கவிதையோ
நாட்டுப்பற்றுடை கவியே சிறந்தவர் என்றது
நகைச்சுவை கவிதைகள் நகைத்து நலனை
பலப்படுத்தும் தன் கவியே சிறந்தவர் என்றது
எனைப் பார்த்த கவிதைகள் புன்னகைத்து
மெய்போல் பொய் பேச ஆயத்தமாயின
கையமர்த்தி அநீதி கண்டு பொங்குபவரே
நற்கவிஞன் இல்லையா என்றேன்…………
கவிதைகள் மௌனமாய் பார்க்கின்றன
தெரிந்தவர் யாரும் பதில் சொல்லுங்கள்
நானும் கவிதைகளும் காத்திருக்கிறோம்.

-கோ.லீலா.

No comments:

Post a Comment