Sunday 28 August 2016

பகுதி 1: உணவு அரசியல்.......


என்ன மேம் அரசியல் எல்லாம் பேசுறீங்க….

வாங்க சியாமளா,ஹேமா,கலா மேம்.

அரசியல்ன்னா நீங்க நினைக்கிற மாதிரி ஆயுதம் கொண்டு போர் புரிந்த கால அரசியலும், பின்னர் கட்சி, கொடியென்றும், தேர்தலென்றும் களைக்கட்டும் அரசியல் அல்ல.

சியாமளா: அட என்ன லீலா ஆரம்பம்பமே பெரிய அரசியல் போலிருக்கே………..

ஆமா சியாமளா, இன்னைக்கு உணவும் அது சார்ந்த அரசியல் பத்தியும்தான் பேசபோறோம்.

கலா: என்ன உணவுன்னா அதிரசம் தெரியும் அதென்ன அரசியல்
கலாஅக்கா,சொல்றேன் நீங்களே நிறைய அது தொடர்பா பேசுவீங்க பாருங்க………..

ஒரு உணவு நமக்கு தேவையா? இல்லையா?ஆரோக்கியமானதா? அதற்கான விலை நியாயமா? என்பது குறித்தான முடிவுகளை நுகர்வோர் எடுக்க முடியாத பெரும் சிக்கலில் இன்று இந்த மனிதகுலம் இருக்கிறது.

ஹேமா: உண்மை தான், ஆனால் எதனால் இப்படி நடக்கிறது என்பது நம்மால் உணரமுடிவதில்லையே லீலா.

ஆமா ஹேமா சரியா சொன்னீங்க…………………

இன்று,விளம்பர கலாச்சாரம்பெருகிவிட்டது,அந்த விளம்பரம்தான், நாம் சில உணவு வகைகளை கைவிடவும், சில உணவு வகைகளை அதிகமாக விரும்பும் மனநிலைக்கும் கட்டாயப்படுத்தப்படுகிறோம்.

இன்றைய வணிக உலகத்தில், உணவு வர்த்தகம்தான் மொத்த மதிப்பில் முதலிடத்தில் இருக்கிறது.

கலா&சியாமளா: என்னப்பாசொல்ற.

ஆமா தனிமனிதனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திட பொங்கி எழுந்த கவிஞன் பிறந்த மண்ணை சேர்ந்தவர்கள் நாம,ஆனா இன்னைக்கு வரைக்கும் பட்டினியால் மரணிப்பவர்களை கொண்ட பூமியை சேர்ந்தவர்களாகவும் இருக்கிறோம்.

இந்தியாவிலும் உணவு வர்த்தகத்தின் மதிப்பும் உயர்ந்து கொண்டே இருக்கிறது.

ஹேமா:லீலா, இந்தியாவில் உணவு வர்த்தகத்தின் மதிப்பு உயர்ந்தால் நமக்கு நல்லதுதானே…..

நல்லதுதான்ஆனா அது ஆரோக்கியமான வளர்ச்சியாகவும்சமமானதாகவும் இருந்தால் நல்லது……….ஆனா அப்படியில்லை

சியாமளா: எத வச்சி சொல்றீங்க லீலா.

இந்தியாவில் 80 கோடி மக்கள் ஒரு நாளைக்கு 20 ரூபாய்க்கும் குறைவான வருமானம் உள்ளவர்கள்,பல பேர் படுக்கைக்கு  பசித்த வயிறோடே செல்கிறார்கள்.

அதே நேரத்தில் உலகமயமாக்கல் என்ற ஒன்று பீட்சாகார்னர், டோமினோஸ், கே.எப்.சி, பீட்சாகுடில், மெக்டொனால்ட் என்ற மாயகரம் கொண்டு நடுத்தரதட்டு மக்களை ஒரு போதையில் தள்ளியிருக்கிறது.
வெளிநாட்டு உணவு வகைகளை வீட்டில்   தயாரிப்பது மேட்டுக்குடியினர் மத்தியில் பரவலாகி வருகிறது. அவற்றின் தயாரிப்புக்கென பிரத்யோகமாக தேவைப்படும் பொருட்களை வாங்குவதும் ,பின்னர் பயன்பாடு இல்லாத போது வீசியெறிவதும் மிக சாதாரணமாக நடக்கிறது.

இப்படி வீண் செய்வது ஒரு பக்கமும், பட்டினியாலும், கடனாலும் உயிர்விடும் விவசாயிகள் ஒருபுறமும் இருக்க அதை எப்படி வளர்ச்சி என கொள்ளமுடியும்.

ஹேமா&கலா: ஆமா, நீங்க சொல்றது சரிதான். உடல் எடையும் இப்போ உள்ள குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் கூடுதலா போச்சு, சர்க்கரை நோய், இதயநோய் இப்படி அதுக்கும் உணவுதான் காரணம்………..இல்லையா

சரியா சொன்னீங்க, உணவு அரசியல் இங்கிருந்துதான் தொடங்குகிறது……..
அறிவியலை வைத்துக்கொண்டு பணமுதலைகளும்,சுயநலசக்திகளும்
இந்த சமூகத்தை ஆட்டிப்படைக்கிறது.

சியாமளா: சுயநல சக்திகள் எப்படி அறிவியலை பயன்படுத்தறாங்க.

விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்வதற்கு இது போன்ற நிறுவனங்கள்தான் நிதியுதவி செய்கின்றன, இறுதியில் ஆராய்ச்சியில் அறிவியலுடன்  , அரசியலும் கலந்துவிடுகிறது.

மருத்துவர்கள் குறைந்த கொழுப்பு உள்ள உணவுகளை பரிந்துரை செய்கிறார்கள், குறிப்பாக அமெரிக்காவில் ,ஏனெனில் உயர்கொழுப்பு உணவுகளை பரிந்துரை செய்தால்மாரடைப்பு போன்ற நோய்கள் வந்தால் உடனே வழக்கு போடும் மனோபாவம் கொண்டவர்கள் அயல்நாட்டினர், எனவே மருத்துவர்கள் நீதிதுறைக்கு பயப்படுகிறார்கள், ஏனென்றால் பலகோடி டாலர் நஷ்ட ஈடு வழங்க வேண்டி வரும்.
இதனால், பன்னாட்டு நிறுவனங்கள் மருத்துவரை அணுகுவதை விட, அதிகாரமுள்ள இடத்தை அணுகினால் போதுமானது என்பதை உணர்ந்துள்ளது.

அமெரிக்காவில் 15% மக்கள் மட்டுமே சரியான எடையில் இருப்பதாகவும்,60% அதிக உடல் எடையுடன் இருப்பதாகவும்,25% உடல் பருமனுடன் இருப்பதாகவும் அமெரிக்க அரசின் புள்ளி விவரம் ஒன்று கூறுகிறது..


60%+25%  மக்கள் உடல் எடையை குறைக்க உடல் பயிற்சி நிறுவனங்களுக்கு செல்லுதல்,அதற்கான உபகரணங்கள் வாங்குவது ,மருந்து மாத்திரைகள் உட்கொள்வது, எடை குறைப்பிற்கான உணவுகளை வாங்குதல் போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.

நல்ல உடல்நிலையில் இருக்கும் பலரையும் கூடுதல் எடை, உடல் பருமன் என சொல்லியதால் ஏற்பட்ட விளைவு இது. இதன் அரசியல் மிகவும் மோசமானது.

கலா: ஏம்பா அப்போ B.M.I B.M.I ன்னு சொல்றாங்களே அதை பார்க்க வேண்டியதுதானே………….

அட, சரியா கேட்டீங்க போங்க,அது ஒரு கதை சொல்றேன் கேளுங்க
1830 க்விட்லட் )AdolpheQuetelet)  ன்னுஒருத்தர் ஜோதிடர். கிரகங்களை வைத்து மனித எடையைக் கணிக்க முடியுமா என்று அறியவே பி.எம்.ஐ என்ற கணக்கீட்டை உருவாக்கினார் .B.M.I ன்னா Body Mass Index.

பி.எம்.. 25-க்கும் அதிகமாக இருந்தால் ஒருவர் அதிக எடை, 30 என்றால் உடல் பருமன் என்று கூறப்பட்டது. ஆனால் பி.எம்.. அளவீடே அடிப்படையில் அறிவியல் ஆதாரம் அற்றது. இந்த முறை ஜோசியத்தை அடிப்படையாகக் கொண்டது. 


BMI அளவை எப்படிக் கணக்கிடுவது?

பி.எம்.ஐ. = உடல் எடை / உயரம் (மீ.) * உயரம் (மீ.)


ஹேமா: அட கொடுமையே,அப்புறம் என்ன தான செய்றது………….


இருங்கஇருங்க…..கடைசியா சில தீர்வுகளையும் சொல்ல போறேன்.

பி.எம்.ஐ யால் எந்த வித அறிவியல் மற்றும் மருத்துவ ரீதியான நன்மையும் கிடையாது.பி.எம்.ஐ குறைவாக இருப்பவர் நீண்ட நாள் வாழ்வர் என்பதும் உண்மையல்ல.சரி பி.எம்.ஐ பத்தி இன்னும் நாலு பக்கத்துக்கு பேசலாம்


சியாமளா ஏதோ கேட்க வராங்க சொல்லுங்க சியாமளா.


சியாமளா:அது சரி உணவுக்கும் இதுக்கும் என்ன தொடர்பு?


                                    


ஒருபக்கம் உடல் பருமனை உருவாக்கும் குப்பை உணவுகளை பன்னாட்டு நிறுவனங்கள் கூவிக்கூவி விற்கின்றன. இதனால் உலகெங்கிலும் உள்ள மக்கள் தங்கள் பாரம்பரிய உணவுகளை விட்டுவிட்டு பன்னாட்டு உணவுகளுக்கு மாறுகிறார்கள்.


                        


மறுபக்கம் இந்த உணவுகளால் ஏற்படும் உடல் பருமனைக் குறைக்க அதே பன்னாட்டு நிறுவனங்கள் ‘டயட் கோக் (Diet Coke), சப்வே சாண்ட்விச் (Subway Sandwich)’ போன்ற அதே குப்பை உணவுகளின் மறுவடிவங்களையும் விற்பனை செய்கின்றன. ஒரு நிறுவனத்தின் உணவுகளைக் கெடுதல் என்று அறிகிற மக்கள், அதேபோன்ற குப்பை உணவுகளை விற்கும் இன்னொரு நிறுவனத்தை நம்பி ஆரோக்கியம் என்கிற பெயரில் பணத்தை வீண் செய்கிறார்கள். இப்படிக் குப்பை உணவுகளால் குறைப்பாடு நோய்கள் வந்தபின் அவற்றைக் குணப்படுத்த மருந்துகளை நாடுகிறார்கள்.
                     


இப்படிக் கற்பனையாக கண்டுபிடிக்கபட்ட குறைப்பாடு நோய்களில் ஒன்று உயர் கொலஸ்டிரால் என்பது. கொலஸ்டிரால் அளவு 200-ஐ தாண்டினால் ஆபத்து, மாரடைப்பு வரும் எனப்பீதியூட்டப்படுவதால் பலரும் அச்சமடைந்து கொலஸ்டிரால் கட்டுப்பாட்டு மருந்துகளை (ஸ்டாடின்) எடுத்துக் கொள்கிறார்கள்.


ஸ்டாடின்கள், பல மருந்து நிறுவனங்களின் கற்பக விருட்சம். இவை கொலஸ்டிரால் அளவைக் குறைக்குமே ஒழிய மரணத்தைத் தடுக்காது. மேலும் இவற்றின் பின் விளைவுகள் ஏராளம். இந்திய ஜனத்தொகையில் சுமார்8% பேர் ஸ்டாடின்களை உட்கொண்டு வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இது குறித்து நிகழ்த்தப்பட்ட ஆய்வு ஒன்று ‘8% இந்தியர்கள் மட்டுமே ஸ்டாடினை உட்கொள்கிறார்கள். இந்த எண்ணிக்கை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கூறுகிறது. (இணைப்பு:http://www.ncbi.nlm.nih.gov/pubmed/24493771)


ஹேமா: அப்போ எப்படிதான் சாப்பிடறது உடல் எடையை குறைக்கிறது?
நிச்சயமாசொல்றேன்

மனிதனின் வரலாறு உணவால் நிர்ணயிக்கப்பட்ட ஒன்று, அதாவது சோறு ரொம்ப முக்கியம்,எனக்கு பிடித்த இரண்டு எழுத்து கவிதைசோறுபோன்ற வசனங்கள் சிரிப்பதற்கு மட்டுமல்ல சிந்திப்பதற்கும் தான்.
தானியங்களும்,பயிர்களும் அறிமுகமாவதற்கு முன் மனிதன்,காடுகளில் வேட்டையாடி உணவை பெற்றான்.ஆனால் இப்போது போல் மூன்று வேளை உணவு கிடையாது,ஏனென்றால்,வேட்டையால் எப்போதும் உணவு கிடைக்காது.

ஆடு,மாடு,மான் போன்றவை தேவைப்படும்போதெல்லாம் மேயும்,ஆனால் மனிதன் புலி,சிங்கம் போன்று பசியோடு இருந்து வேட்டையாடிய பின் கிடைத்த உணவை வயிறு புடைக்க சாப்பிட கூடியவனாக இருந்தான். அதாவது விரத்திற்கு பின் விருந்து என்பது போல்.இதிலிருந்து மனிதன் பசிக்கு பழகியவன் என்பது தெளிவாக தெரிகிறது.

ஆதிமனிதன் வேட்டையைத் தேடி அலைந்தவன். அவனுக்குத் தினமும் மும்முறை உணவருந்தும் சொகுசான வாழ்க்கைமுறை அமையவில்லை. பல நாள் பட்டினி கிடந்து ஒரு நாள் மிகப்பெரிய வேட்டையில் ஈடுபட்டு, அதன் பயனால் வயிறு நிரம்ப உண்பதே ஆதிமனிதனின் உணவுமுறையாகவும் வாழ்க்கை முறையாகவும் இருந்தது.
                         


மனிதனின் உடல் பட்டினியுடன் இருக்க கூடிய சக்தியை உடையதாகவே இருக்கிறது.பட்டினி இருந்தாலும் பசியுடன் இருக்க வேண்டிய அவசியம் இல்லை, விரதமிருக்கும்போது பசியின் சுவடு இல்லாமல் விரதமிருப்பவர்கள் வீட்டில் சுவையான பலகாரங்கள் தாயரிப்பதை பார்த்திருக்கிறோம்,அதே போல் உண்ணாவிரதமிருக்கும் தலைவர்கள் கூட சிறிதும் களைப்பின்றி கோஷம் போடுவது,அல்லது பேசுவதை கேட்டிருக்கிறோம்,இதன் மூலம் அறியப்படுவது என்னவென்றால் பட்டினியுடன் இருப்பவர்கள் பசியுடன் இருக்கவேண்டிய அவசியமில்லை என்பதைதான்.


சியாமளா: அது எப்படி சாப்பிடாத போது பசிக்காதுன்னு சொல்றீங்க?



                  


மனிதன் எத்தனை நாள் உணவின்றி இருக்க முடியென்பது,அவரவர் உடலில் உள்ள கொழுப்பை பொறுத்தது தான். ஒரு வேளை உணவை உண்டாலும், அது நம் உடலின் இன்சுலினை சுரக்க செய்து இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவை குறைத்து உடனே பசியை தூண்டி விடுகிறது.ஆனால் விரதமிருக்கும் போது இது நிகழாதாதல் பசி உண்டாவதில்லை.


கலா: விரதம் விருந்து ன்னு அது என்ன?


விரதமும் விருந்துமென்ற உணவு முறை ஆதிமனிதனிடமிருந்து வந்தது,அதன் நீட்சிதான்,சில மதங்களில் விரதம்முடியும் போது வடை, சுண்டல், பொங்கல், புளியோதரை, பாயசம் என தடபுடலாக விருந்து படைப்பது அறிவியலின் அடிப்படைதான்

                           

ஹேமா:அப்போ எல்லா நோன்புகளும் அப்படிதானா?


கண்டிப்பாக மேம்,ரம்ஜான் போது அதிகாலை நான்கு மணிக்கும்,மாலை ஆறுமணிக்கு நோன்பு துறத்தலும் கூட ஒரு பெரிய அறிவியல்,இதற்கு பெயர் வாரியர் டயட்,இதை நமது முன்னோர்கள் தினசரி வாழ்க்கையிலும் பின்பற்றினார்கள்.


                            


உணவு பழக்கம் என்பது ஒரு நாட்டின் அல்லது ஒரு பகுதியின் சிறப்பான தடப்வெட்ப சூழல்,மண்ணின் தன்மை,நீரின் அளவு,மற்றும்விவசாயத்தின் முறை,தன்மை என்று பல்வேறு காரணிகளின் அடிப்படையில் உருவான அனுபவ அறிவின் விளைவாகும்.


நம் தேசத்தில் குறிப்பாக தமிழகத்தில்( நாம் கண்கூடாக பார்த்தது) கடும் உடல் உழைப்பில் ஈடுபடுபவர்கள் அதிகாலையில் நீராகாரம் அல்லது கூழ் அருந்தி செல்வர்,இடையில் நீரிழப்பினை ஈடு செய்ய மோர் அல்லது பானகம் அருந்துவர்( மிக குறைவு) மற்றபடி மாலை 3-4 மணியளவில் பணி முடித்து வந்த பின் காய்கறிகளுடன் கூடிய உணவோ அல்லது அசைவ உணவோ உண்பர்.


ஆதிமனிதர் போன்றே,சூரியன் மறையும்போது உறங்க சென்று,உதயத்தில் எழுவதும் முறை.இப்படி 16மணி நேரம் விரதமிருப்பதால் உடலில் உள்ள கொழுப்பு எரிக்கப்பட்டு,சரியான எடையில் இருந்தார்கள்.






பல நாடுகளில் மாலை சூரியன் மறைந்தவுடன் மக்கள் உறங்கிவிடுவார்கள். அதிகாலையில் சூரியன் உதிக்கும்போது விழித்துக்கொள்வார்கள். மக்களின் காலகடிகாரம் சூரியனைச் சுற்றியே அமைக்கப்பட்டிருந்தது. அதனால் இரவு உணவு என்று குறிப்பிடும்போது மாலை 4 அல்லது 5 மணியளவில் சாப்பிட்டார்கள் எனப் புரிந்து கொள்ள வேண்டும்.


தினமும் காலையில் சாப்பிடுகிறோம். அந்த உணவில் உள்ள மாவுச்சத்தை எரித்து முடிக்க உடலுக்கு ஆறு முதல் எட்டு மணி நேரம் பிடிக்கும். அதன்பின் நாம் எதையும் உண்ணவில்லை என்றால் உடலில் சர்க்கரை (க்ளுகோஸ்) அளவுகள் அதிகரிக்காது. இதனால் உடலில் இன்சுலின் சுரக்கும் அவசியமும் ஏற்படாது.


இன்சுலின் சுரப்பு நின்றவுடன் உடல், கொழுப்பை எரிக்கும் நிலைக்குச் செல்லும். இதற்குக் காரணம்? உடல் இயங்க கலோரிகள் தேவை. அந்த கலோரிகள் உணவின் மூலம் கிடைக்காமல் இருக்கும்போது உடல் ஏற்கெனவே சேமித்து வைத்துள்ள (அதாவது தொப்பையில் உள்ள) கொழுப்பை எரித்து க்ளுகோஸாக மாற்றி பயன்படுத்தும். (இதனால் தொப்பை முதலான இடங்களில் தேங்கியுள்ள ஊளைச்சதை குறைகிறது.) இதை க்ளுகோனொஜெனெசிஸ் (Gluconeogenesis) என அழைப்பார்கள். உணவு இல்லாவிட்டாலும் உடலுக்குத் தேவையான ஆற்றல் இப்படித்தான் கிடைக்கிறது.


ஆக, ஆறு அல்லது எட்டுமணி நேரத்துக்கு அதிகமாக நீங்கள் உண்ணாவிரதம் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் உடல் தொடர்ந்து கொழுப்பை எரித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால், நடுவில் உணவுப்பொருளை உள்ளே தள்ளினால் அந்த இயக்கம் நின்றுவிடுகிறது. ஆறு – எட்டு மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் தொடர்கிறது.


நாள் முழுக்க இடைவிடாமல் தின்றுகொண்டே இருப்பது உங்களை எடையை இழக்கவிடாமல் தடுக்கிறது. அடிக்கடி சாப்பிட்டுக்கொண்டு இருந்தால் உடல் கொழுப்பை எரிக்கும் நிலைக்குச் செல்லாது. உண்ணாவிரதம் நம் உடலின் இன்சுலின் உணர்திறனை (Insulin sensitivity) அதிகரிக்கிறது. அதாவது குறைவான இன்சுலினை சுரந்து அதிக அளவிலான க்ளுகோஸை எரிக்கும் சக்தி.


உண்ணாவிரதம் என்றால் நாள்கணக்கில் பட்டினி கிடப்பதல்ல. அது அவசியமும் அல்ல. காலை உணவைத் தவிர்த்து தினமும் இரு வேளை உண்டாலே தினமும் 16 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்ததற்குச் சமம். அதுவே நம் உடலுக்குப் போதுமான நன்மைகளை அளிக்கும். நோயாளிகள், சர்க்கரை குறைப்பாடு நோய் உள்ளவர்கள், வயதானவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள், குழந்தைகள் தவிர்த்து நல்ல உடல்நலனுடன் இருப்பவர்கள் தினமும் ஒன்று அல்லது இரு வேளை மட்டுமே உண்ணும் உண்ணாவிரதத்தை மேற்கொள்ளலாம். அந்த இரு வேளை நீங்கள் உண்ணும் உணவானது இயற்கையை ஒட்டிய நம் ஜீன்களுக்கு நெருக்கமான பேலியோ உணவாக இருக்கவேண்டும் என்பது முக்கியம். இந்த உணவுமுறையே நோய்கள், மருந்துகளில் இருந்து நம்மை விடுதலை செய்யும்.


                            


பகல், இரவு காலத்தை உணரும் சக்தி, சிர்கேடியன் கடிகாரம் எனப்படுகிறது. சிர்கேடியன் கடிகாரத்தினால்தான் நாம் வழக்கமான நேரத்தில் உணவு உண்பதும், நேரத்தில் தூங்கி விழிப்பதும் சாத்தியமாகிறது. பகல், இரவு, பசி, தூக்கம் முதலான உணர்வுகளை நம்மிடையே தூண்டுகிறது. மனிதனின் சிர்கேடியன் கடிகாரம், மாலையில் பசியை அதிகரிக்கச் செய்கிறது என்கிறது இந்த ஆய்வு. (இணைப்பு:http://www.ncbi.nlm.nih.gov/pubmed/23456944)


இந்த ஆய்வின்படி, உறங்கி எழுந்தபிறகு உண்ணாமல் இருந்தால் காலையில் மட்டுமல்ல மதியமும் பசி எடுக்காது. ஆனால், மாலையில் பசி அதிகரிக்கும். இரவு எட்டு மணிக்கு பசி உச்சக்கட்டத்தை எட்டி, பிறகு மெதுவாக அடங்கிவிடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். பரிணாமரீதியாக மாலையில் பசி அதிகரிக்கும். இரவில் குறையும். பிறகு அந்த இரவுப் பசியும் அடங்கிவிடும்.


காரணம்?


மாலை உண்ணும் உணவில் உள்ள ஊட்டச்சத்துகளே இரவில் நம் உடலுக்குப் போதுமான ஹார்மோன்களை உற்பத்தி செய்ய உதவுகின்றன. பலரும் இரவில் இஷ்டத்துக்கு நொறுக்குத்தீனி உண்பதைக் காணமுடியும். காரணம் சிர்கேடியன் கடிகாரம்தான். இரவு உணவில் போதுமான ஊட்டச்சத்துக்கள் இல்லை என்றால் நொறுக்குத் தீனியை மனம் தேடும். அதே மாலை வேளையில் உண்ணாமல் போனால் இரவில் பசி குறையும். காரணம் கொலைப்பட்டினியில் உறக்கம் வராது என்பதால் சிர்கேடியன் கடிகாரம் இரவானதும் பசியை மட்டுப்படுத்திவிடும்.


வாரியர் டயட் போன்ற விரத முறைகள் நம் மூளையைச் சுறுசுறுப்பாக்கும். மூளையில் புதிய செல்களை உருவாக்கும். பசி எடுத்தால்தான் வித்தியாசமாக எதையாவது செய்து அறிவை வளர்ப்போம். கடுமையாக உழைப்போம். பசி தான் பலரை உயர்ந்த நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது. இந்த நல்ல ஆயுதத்தை மூன்று வேளை உணவால் வீணடித்துவிட்டோம். அதனை வாரியர் டயட் மூலம் மீட்டெடுப்போம்.


மூன்று வேளையும் மருந்துகளை எடுத்துக்கொள்ளும் நோயாளிகள், சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், வயதானவர்கள், அல்சர் நோயாளிகள், குழந்தைகள் என இவர்களைத் தவிர்த்து நல்ல உடல்நிலையில் உள்ளவர்கள் இந்த வாரியர் டயட்டைப் பின்பற்றலாம்.

சியாமளா:சரி சரி உணவு அரசியலுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?

கண்டிப்பா இருக்கு சியாமளா,முன்பே நான் கூறியதுபோல் ஒரு நாட்டின் அல்லது ஒரு பகுதியின் சிறப்பான தடப்வெட்ப சூழல்,மண்ணின் தன்மை,நீரின் அளவு,மற்றும்விவசாயத்தின் முறை,தன்மை என்று பல நூற்றாண்டு கால விவசாய அனுபவ சேகரம்தான் இந்த விவசாய அறிவு.ஆனால்,குப்பை உணவுகளை,தின்பண்டங்களை சந்தையில் குவித்துள்ள பன்னாட்டு நிறுவனங்கள் எதிர்நோக்கும்சந்தை தேவையின் முன் இந்த விவசாய அறிவு தேவையற்ற குப்பையை போல் வீசியெறியப்படுகிறது.


எடுத்துக்காட்டாக Lays எனப்படும் சிப்ஸ் தயாரிப்பதற்காக பஞ்சாபில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் ஒரே ருசி தருவதற்கு ஏற்ற வகையில் ஒரே ரக உருளை கிழங்கு பயிரிடப்படுகிறது.


கோதுமை விளைச்சலுக்கு ஏற்ற பஞ்சாபின் விளை நிலங்கள் அந்த மண்ணிற்கு சம்பந்தமில்லாத உருளை கிழங்கை பயிரிட வலுக்கட்டாயமாக மாற்றப்பட்டுள்ளது.இது சுயசார்பு விவசாயத்தை அழிக்கிறது,அதோடு பாரம்பரிய உணவும் அழிகிறது.


இதில பாருங்க,கோதுமை வீளையக்கூடிய பூமியில உருளை விளையுது,,ஆனால் இன்னொரு புறம் சர்க்கரை குறைப்பாடு நோய் உள்ளவர்களுக்கு ஏற்ற உணவாக கோதுமையை அடிப்படையாக கொண்ட பொருட்கள் விளம்பரப்படுத்தப்படுகின்றன.இவ்வளவு கோதுமை எங்கு விளைகிறது?


கலா: ஏம்பா,நீ சொன்னவுடனேதான் தோணுது,இந்த பால் பாக்கெட் வாங்குறோமே அது நல்லதா?


அக்கா,உணவு அரசியல் அப்படின்னு சொன்னவுடனே விளையிற பொருளை மட்டுமல்ல,விலங்குகளிடத்தும் மனிதன் இரக்கமற்று நடந்து கொள்கிறான், அதனால அழியற்து இந்த மனுசங்கதான்.


மனிதனை தவிர,வேறு எந்த உயிரினமும் தன் தாய் பாலை தவிர வேறொர் விலங்கின் பாலை குடிக்கிறதில்லை


ஹேமா: அட ஆமாம்…………….


மனித இனத்தின் மகத்தான செல்வம் தாய்ப்பால்,குழந்தையின் மனநிலை, உடல்நிலை,தேவை,அளவு பொருத்து ஒரு தாயின் மூளை செயல்பட்டு பாலை சுரக்கிறது,அப்படி சுரக்கும் பாலில் உள்ள கொழுப்பை சீரணிக்க லைபேஸ் என்ற என்சைமையும் சேர்த்து அனுப்பும் சிறப்பு தாய்க்கு உண்டு. இன்னும் நவீன உணவு அறிவியல் சார்ந்து நோக்கினால் 4 வயதுக்கு மேல் பால் புரத்தை சீரணிக்கும் சக்தி குறைந்துவிடுவதாக தெரிய வருகிறது.



                                   

நிலவரம் இப்படியிருக்க,பால் சார்ந்த உணவுக்கான விளம்பரங்கள் கொடிக்கட்டி பறக்கிறது.உன் காலத்தில் வீட்டு தொழுவத்தில் வளர்க்கப்பட்ட நாட்டுமாடுகள் சுமார் 4லிடரிலிருந்து 5லிட்டர் வரை பால் கறக்கும்,பல கிராமங்களில் மாடுகளை வளர்த்தாலும்,பால் அருந்ததா சமூகமாக இருந்திருக்கிறார்கள்,பால் என்பது மருந்துக்காவும்,விருந்துக்காகவும்மட்டுமே பயன்படுத்தி இருக்கிறார்கள்.இந்த நாட்டு மாடுகளுக்கு வைக்கோல்,புல் போன்றவை போதுமானதாக இருந்திருக்கிறது,இதன் சாணத்தை எருவாக்கி, இயற்கை உரமாக பயன்படுத்தினர்

.
                               


ஆனால்,இந்த உணவு அரசியல்,மேலை நாட்டு வாக்கியங்களை முதலில் அறிமுகம் செய்தது “A cup of milk a day keeps the doctor away என்று,இது அன்றைய பால் வணிகத்திற்காக சொல்லப்பட்டு அறிவியல் வேடம் பூண்ட பொய்.


நாட்டுமாடுகள் கறக்கும்பால் இவர்களின் சந்தைக்கு சரிப்பட்டு வராத காரணத்தினால் அயல்மாடுகளை இறக்குமதி செய்து இரசாயன் ஊசிகள் மூலம்சுமார் 20-25 லிட்டர் பாலை கறக்க செய்கின்றனர் இப்படி கறப்பதற்கு பல இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.பொதுவாக நாட்டு மாடுகளின் பாலையே அளவாகதான் பயன்படுத்த வேண்டும் ஏனென்றால் கேசின் என்ற எளிதில் செரிக்காத புரதம்தான் மாட்டு பாலில் உள்ளது.

                           


ஆப்பிரிக்க மஸாய் எனும்பழங்குடியினர் தாய்ப்பாலுக்குப் பின் அவர்கள் வேறெந்த பாலையும் அருந்துவதில்லையாம்.


குழந்தைப்பருவத்தில் அதிகமாக மாட்டு பால் குடிக்கும்பெண் குழந்தைகள் சீக்கிரம் பூபெய்தி விடுகின்றனர்.இப்படி இந்த பாலில் உள்ள பல்வேறு அரசியல் குறித்து ஏராளமாக பேசிக்கொண்டே போகலாம்.

                                  


சியாமளா: சர்க்கரை நோய்க்கும் இந்த உணவு அரசியலுக்கும் தொடர்பு இருக்கும் போலவே………………….


சரியா சொன்னீங்க இன்னைக்கு,சுகர் அப்படின்னா இன்சுலின் சுரப்பின் குறைப்பாடு எல்லோருக்கும் தெரியும்.ஆனா இந்த இன்சுலின் சுரக்க கூடிய கணையத்தின் செயல்பாட்டைஎது ஊக்குவிக்கிறதுன்னு தெரியுமா?







சர்க்கரை குறைப்பாடு நோய், வைட்டமின் டி குறைபாட்டால் வருவது என இப்போது கண்டறிந்துள்ளார்கள். வைட்டமின் டி நம் உடலில் சர்க்கரையைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுவது குறித்து ஆராய்ந்த விஞ்ஞானிகள் ‘சர்க்கரை குறைப்பாடு நோய் என்பது வைட்டமின் டி குறைபாடே என்று சொல்கிற அளவுக்கு சர்க்கரை மேலாண்மைக்கு (Glucose regulation. அதாவது ரத்தத்தில் சர்க்கரை அளவுகள் குறையாமலும், அதிகரிக்காமலும் ஒரே அளவில் இருக்கும்படி ரத்தச் சர்க்கரை அளவுகளைப் பராமரிப்பது) வைட்டமின் டி முக்கியமானது’ என்கிறார்கள். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை மேலாண்மை செய்ய இன்சுலின் அவசியம். அந்த இன்சுலின் நம் கணையத்தில் உற்பத்தி ஆகிறது. கணையத்தில் உள்ள பீட்டா செல்களே இன்சுலினை உற்பத்தி செய்கின்றன. ஆனால் அந்த பீட்டா செல்களை இயக்கும் சக்தி வைட்டமின் டி-யிடம் உள்ளது. வைட்டமின் டி தட்டுப்பாடு ஏற்படும்போது கணையத்தில் இன்சுலின் குறைவாக சுரக்கிறது. இதனால் சர்க்கரை குறைப்பாடு நோய் வருகிறது.


                                   


டைப் 1 சர்க்கரை குறைப்பாடு நோய் ஏன் வருகிறது, எதற்கு வருகிறது என புரியாமல் விஞ்ஞானிகள் திகைக்கிறார்கள். ஆனால் குழந்தை பிறந்தவுடன் அதை மதியம் வெயிலில் காண்பித்தால் அக்குழந்தைக்கு டைப் 1 சர்க்கரை குறைப்பாடு நோய் வரும் வாய்ப்புகள் பெருமளவு குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதேபோல பிள்ளையின் தாய்க்கு வைட்டமின் டி பற்றாக்குறை இருந்தால் பிறக்கும் குழந்தைக்கு டைப் 1 சர்க்கரை குறைப்பாடு நோய் ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம் என்று சொல்லப்படுகிறது.


கலா: என்னப்பா,தோண்ட தோண்ட பூதம் ன்னு சொல்வாங்களே அந்த மாதிரி இருக்கு……


ஆமாக்கா, வைட்டமின் டி என்பது பொதுவாக சூரிய ஓளியிலிருந்தே பெற்றுக்கொள்ளக்கூடியது.வைட்டமின் டி என்பது இரண்டு வகைகளை கொண்டுள்ளது.வைட்டமின் டி2 மற்றும் டி3 ஆகும்.நமக்கு தேவையான வைட்டமின் டி3 சூரிய ஒளியில் இருந்து கிடைக்கிறது,டி2 என்பது காளான் போன்ற உணவு வகைகளில் கிடைக்கிறது டி3 நெத்திலி,மத்தி மீன்,முட்டை ஆகியவற்றில் இருக்கிறது,எனினும் சூரிய ஒளியில் இருந்து கிடைக்கப்பெறும் போது உடலுக்கு தேவையான அளவை மட்டும் தோல் மூலமாக பெற்றுக்கொள்ளும்,.


                            


வைட்டமின் டி3 மாத்திரைகளாக கிடைக்கிறது,,ஆனால் இது கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் என்பதால் மாத்திரையோடு இந்த கொழுப்பும் சேர்ந்துதான் உட்கொள்ள வேண்டியிருக்கும்,ஆனால் அந்த பிரச்சனை சூரிய ஒளியில் கிடைக்கும் வைட்டமின் டி3 யில் கிடையாது.


செய்ய வேண்டியது வெய்யில் படும்படியாக இருப்பதுதான்,ஆனால் reflect ஆகும் சூரிய ஒளி ஆகாது(கண்ணாடி வழியாக).


    


அதனால்,சூரிய ஒளியை பெற்றாலே சர்க்கரைகுறைப்பாட்டு நோய் குணமாகும்,மாறாக இவர்களுக்கு ஓட்ஸ்,இன்னும் பிற உணவு அரசியலுக்கு ஆட்பட்ட உணவுகளை பரிந்துரை செய்வதன் மூலம் அத்தனை பயன் என கூறிட முடியாது.


ஹேமா: நூடுல்ஸ்,குர்குரே லேஸ்,க்ர்ஸ்பி ஃப்ரை போன்ற உணவுகள்………………….பற்றி சொல்லுங்க


ஆமாம் எல்லாமே உணவு அரசியலுக்கு உட்பட்டதுதான்,


ஏற்கனவே நிறைய பேசிட்டதால,ஒரு சில செய்திகளை சொல்லி முடிச்சிப்போம்…………தேவைப்பட்டால் இன்னொரு நாள் இன்னும் கூட விரிவாக பேசலாம் அவ்வளவு செய்திகள் இருக்கு.


சியாமளா: இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த என்ன செய்றாங்க……….




                                   





நல்லா கேட்டீங்க காக்கா முட்டை என்கிற படம் வெகு அழகாக இந்த உணவு அரசியலால் அடித்தட்டு மக்களின் உணவு பறிக்கப்படுவதும்,பீட்சா போன்ற உணவுகள் வெறும் பணம் தொடர்பான செய்தி மட்டுமல்ல என்பதையும் அது கலாச்சார தொடர்பான விஷயமெனவும் அதில் அழகாக சொல்லப்பட்டிருக்கிறது.


ஊருக்கே சோறும் போடும் விவ்சாயகள் ஒரு புறம் வறுமையில் சாக,அந்த நிலங்கள் மலடாகவும்,மலட்டு விதைகளை விளைவிக்கவும்,பராம்பரிய பயிர் வகைகளை,அதன் விதைகளை இழக்க நிர்பந்திக்கப்படும் வேதனையும், உடல் ஆரோக்கியமும்,மன ஆரோக்கியம் இரண்டையும் கொடுக்காத உணவை நோக்கிய பயணத்தின் நீண்ட வேதனையின் வேர்தான் உணவு அரசியல்.


நண்பர்களே சற்றே நீளமான ஒரு செய்தி,நீண்ட பாரம்பரியமும் அதன் பெருமையும் அழியும்போது விடும் நீள் பெருமூச்சு போல் சற்றே நீண்டுவிட்டன செய்திகள்.


நன்றி நண்பர்களே.


-அன்புடன் லீலா. .






Refernce Books and Articles.


1.WARRIOR DIET-ORI HOFMEKLER


2.FASTING,FEASTING –ANITA DESAI


3.பன்றித்தீனி-புதிய கலாச்காரம் வெளியீடு


3.தினமணி கட்டுரைகள்-நியாண்டர் செல்வன்


4.படங்கள் மற்றும் காணொளி-இணையம்


Friday 19 August 2016

யானையின் குரல்................

வணக்கம் நண்பர்களே………..
தண்ணீரில் யானை
      
அம்முவுக்கும் அரவிந்து க்கும் கத சொல்ல போறேன்……..
இன்னைக்கு எல்லோருக்கும் பிடித்தமான கதை.
அம்மு அரவிந்து வாங்க,வாங்க, Uncle,aunty எல்லாம் வந்தாச்சு……….

அம்மு: என்னம்மா கத…….

அரவிந்த்: அத்த சின்ன பசங்க மாதிரி எப்ப பாத்தாலும் யானை கத தானே சொல்லும் என்னத்த…….

என்ன கிண்டலா ம்ம்……….எனக்கு ரொம்ப பிடிச்சது யானை…………..

என்ன நண்பர்களே உங்களுக்கு ஒரு செய்தி தெரியுமா? உலகில் காண காண சலிக்காத காட்சிகள் ஒன்பது

1.குழந்தையின் சிரிப்பு 2.துறவி 3.யானை 4.கடல் 5.ரயில்  ……………
அதில் யானையை பற்றிதான் இன்று சொல்ல போகிறேன்.

அம்மு: என்ன இன்னைக்கு ஸ்பெஷல்?

ஆகஸ்ட் 12 சர்வதேச யானைகள் தினம்.

அரவிந்த்: அத்த நீதான் பரம்பிக்குளத்தில நிறைய யானையை அடிக்கடி பார்ப்ப அப்போ நிறைய சொல்லுவ 

அம்மு:அம்மா,யானை இந்தியால மட்டும்தான் இருக்கா?
ஆப்பிக்கா,இந்தோனோசியா,தாய்லாந்து,இந்தியா,பர்மா நாடுகளில் இருக்கிறது.

அம்மு &அரவிந்த்: வெள்ளை யானை பற்க்குமா?
ஹாஹா,யானை பறக்காது,ஆனா வெள்ளை யானை இருக்கு..
காட்டில் வெள்ளை யானை
          

அரவிந்த்:எங்கேயிருக்கு அத்த

வெள்ளை யானை
             
தாய்லாந்த் மற்றும் பர்மாவில் அதிகம்

அம்மு: அரவிந்த் யானையை ஏன் கோயில்ல வச்சிருக்காங்க தெரியுமா?
கோயிலில்  யானை

அரவிந்த்: அத்த கிட்ட கேப்போம்

அது மக்களோட அறியாமை,என்ன நண்பர்களே நான் சொலவது சரிதானே.


அம்மு:யானையோட பல்லுதான் தந்தமா?



சரியா கேட்ட

யானையின் பல்
யானையோட மேல்தாடையில் வளரும் பல்தான் தந்தம்



யானையின் பல்



அரவிந்த்: அப்போ ஆண் யானைக்கு மட்டும்தானே தந்தம் இருக்கு.
ஆமாம்,பெண் யானைக்கும் இது வளரும்,யானை கன்றாக இருக்கும்போது ஆண்,பெண் யானை இரண்டுக்கும் குட்டியா தந்தமிருக்கும்,வளர வளர பெண் யானைக்கு தந்தம் வளராது…..

அம்மு: அம்மா, யானை என்ன சாப்பிடும் எவ்வளவு சாப்பிடும்?
என்ன நண்பர்களே உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்……….
யானை ஒரு சைவ உணவுக்காரங்க அதாவது தாவர உண்ணி.குறிப்ப மூங்கிலை விரும்பி உண்ணும்,கரும்பு,வாழை போன்றவை  இவங்களின் விருப்பமான உணவு.

யானை சாப்பிட்டு மீதம் போட்ட மூங்கிலைதான் புல்லாங்குழல் செய்வார்கள்,ஏனெனில் யானை  சாப்பிட்டு போட்ட மூங்கில் ரொம்ப சுவையான அதாவது இனிப்பா இருக்கும்,அந்த மூங்கிலில்தான் புல்லாங்குழல் செய்தால் இசை இனிமையாக இருக்குமென ஒரு கூடுதல் தகவல்,ஆறு துளையிட்டால் ஹிந்துஸ்தானி இசையும்,ஏழு துளையிட்டால் கர்னாடாக இசைக்கு உகந்தது எனவும் செவி வழி செய்தி.

அரவிந்த்: அத்த யானைக்கு நிறைய பேர் இருக்காம்,எங்க தமிழ் மிஸ் சொன்னாங்க.

ஹாஹா,ஆனா யானைக்கு அதோட பெயர் தெரியாது,சரி சொல்றேன்..ஆண் யானையை களிறு என்றும்,பெண் யானையை பிடி என்றும்,யானையின் குட்டிகளை கன்று அல்லது யானை குட்டி என்றும் சொல்கிறர்கள்

இது போக யானையின் தமிழ்ப்பெயர்கள்,

யானை/ஏனை (கரியது)
வேழம் (வெள்ளை யானை)
களிறு
களபம்
மாதங்கம்
கைம்மா (துதிக்கையுடைய விலங்கு)
உம்பர்
உம்பல் (உயர்ந்தது)
அஞ்சனாவதி
அரசுவா
அல்லியன்
அறுபடை
ஆம்பல்
ஆனை
இபம்
இரதி
குஞ்சரம்
இருள்
தும்பு
வல்விலங்கு
தூங்கல்
தோல்
கறையடி (உரல் போன்ற பாதத்தை உடையது)
எறும்பி
பெருமா (பெரிய விலங்கு)
வாரணம் (சங்கு போன்ற தலையை உடையது அல்லது புல்லை வாரிப்போடுவது)
புழைக்கை/பூட்கை (துளையுள்ள கையை உடையது)
ஒருத்தல்
ஓங்கல் (மலைபோன்றது)
நாக
பொங்கடி (பெரிய பாதத்தை உடையது)
கும்பி
தும்பி (துளையுள்ள கையை உடையது)
நால்வாய் (தொங்குகின்ற வாயை உடையது)
குஞ்சரம் (திரண்டது)
கரேணு
உவா (திரண்டது)
கரி (கரியது)
கள்வன் (கரியது)
கொம்பன்
கயம்
சிந்துரம்
வயமா
புகர்முகம் (முகத்தில் புள்ளியுள்ளது)
தந்தி
மதாவளம்
தந்தாவளம்
கைம்மலை (கையை உடைய மலை போன்றது)
வழுவை (உருண்டு திரண்டது)
மந்தமா
மருண்மா
மதகயம்
போதகம்
யூதநாதன் (யானைக்கூட்டத்துத் தலையானையின் பெயர்)
மதோற்கடம்(மதகயத்தின் பெயர்)
கடகம் (யானைத்திரளின்/கூட்டத்தின் பெயர்

என்ன நண்பர்களே எத்தனை பேருன்னு மலைப்பா இருக்கா,நம் மொழியின் தொன்மையும்,சிறப்புக்கும் இது ஒரு சான்று.

அம்மு: அம்மா யானை இவ்வளவு குண்டாயிருக்கே அது நடக்கும் போது செடியெல்லாம் செத்து போயிடும்ல,ஆனா யானை இல்லைன்னா காடு இல்லைன்னு சொல்ற.

அடடே நல்ல கேள்விதான் பாருங்க நண்பர்களே எப்படியான ஒரு கேள்வி.னக்கும் இதே சந்தேகம் இருந்தது…………..ஆனா யானையோட உருவத்திற்கும்,பெரிய காலுக்கும் சம்பந்தமில்லாத ஒரு செய்தி சொல்ல போறேன்.அதாவது யானையோட பாதங்கள் மிக மென்மையானவை, மென்பந்து போன்றது,(Elastic nature) ,யானை கால் பதித்து நடக்கும்போது காலை எடுக்கும்போது செடிகள் திரும்பவும் தன் நிலைக்கு வந்துவிடும்.

யானையால் வெயிலில் நிற்க முடியாது,அதனால்தான் வளர்ப்பு யானைகளாக இருக்க அனுமதிக்கப்படும் யானைகளுக்கு சணல் சாக்குகளை தண்ணீரில் நனைத்து போட்டு அது மீது தான் நிற்க வைக்க வேண்டும் என்ற விதிகள் உண்டு.

தார் சாலையில் தகிக்கும் வெயிலில் யானை
         

அதனால காடு அழியாது. அதே மாதிரி வளர்ந்த யானைகளின் உணவு சுமார் 250 கிலோ உணவும் 150 லிட்டர் தண்ணீரும் ஆகும்.எனினும் உண்ட உணவில் சுமார் 40% சதவீத உணவை மட்டும்தான் ஜீரணிக்கிறது,மற்றவை கழிவுகளுடன் வெளியேறுகிறது.இந்த கழிவுகளில் யானைகள் உண்ட பெரும் மரப்பட்டைகள் போன்ற உணவு பொருட்கள் மென்மையாகி வெளிவருகிறது

இதை உண்டே வண்ணத்துப்பூச்சிகளும்பல்வேறு வண்டுகளும் வாழ்கிறது. பெரும் மரப்பட்டைகளை உரிக்கவும் அதை ஜீரணிக்கவும் முடியாத சின்னஞ்சிறு வண்டினங்களுக்கு உணவை அளிக்க இயற்கை படைத்த மாபெரும் உயிரினம்தான் யானை.வண்ணத்துப்பூச்சிகள் இருந்தால் தானே மகரந்த சேர்க்கை மற்றும் அயற்மகரந்த சேர்க்கை நடந்து மரங்களும், செடி, கொடிகளும் பல்கி பெருகி வனமாகும். அதே  போல் குளிர்காலத்தில் யானையின் சாணத்தில் உள்ள கதகதப்பில் குளிரை தீர்த்துக்கொள்ள சிற்றுயிர்கள் சாணத்தில் குடியேறும்.இப்படியாக யானை காட்டை பாதுகாக்கிறது.

அரவிந்த்& அம்மு: இவ்வளோ பெரிய யானை சின்ன குச்சிக்கு ஏன் பயப்படுது?

என்ன நண்பர்களே,உங்களுக்கு தெரியுமா?

 நண்பர்கள்: குழந்தைங்க அங்குசம் என்பதைதான் சின்ன குச்சின்னு சொல்றாங்கன்னு தெரியுது……மற்றதை நீங்களே சொல்லுங்க.

ஆமாம் ரொம்ப சரியா சொன்னீங்க….. அது அங்குசம்தான்

அங்குசம் தேவையா? பெரிய உருவமான யானை, மூன்று அடி உயரமுள்ள அங்குசத்திற்கு கட்டுப்படும் ரகசியம் எதுவுமில்லை. யானைக்கு 110 வர்ம இடங்கள் உள்ளன.அதில் ஏதாவது ஒன்றை அழுத்தி குத்தும்போது, யானை கட்டுப்படும். மற்றபடி, யானைக்கும், அங்குசத்திற்கும் சம்பந்தமில்லை.


   
அரவிந்த்:  அத்த ,மனுசன் குரங்கிலிருந்து வந்தான்னு சொல்லிக்கொடுத்தே.அப்போ யானைக்கும் அதே மாதிரி கத இருக்கா? சொல்லு.

அம்மு: பன்றியிலேருந்து………

அரவிந்த்: ஹாஹா அத்த அம்மு ஜோக் பண்ணுது.

இல்ல தம்பி,அம்மு ஜோக்கு சொன்னாலும் அதுதான் உண்மை

தற்போதைய யானைகள், பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு பன்றி போன்ற உருவத்தில் இருந்து தட்பவெப்ப சூழ்நிலைகளால் மாற்றமடைந்து தற்போதைய உருவத்தை அடைந்தவை.

ல கோடி மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மூன்தெரியம் எனப்பட்ட பன்றி போல் உருவத்தில் தோன்றின. பின் மாமூத் என்ற பரிணாம வளர்ச்சி பெற்றது. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மாமூத் இனங்கள் காணப்பட்டுள்ளன. பனிக்காலமாக இருந்ததால் அவை தோல் வளர்ந்து காணப்பட்டன.அதிலிருந்து படிப்படியாக வளர்ச்சி பெற்று தற்போதைய உருவத்தை யானைகள் பெற்றன. தற்போது உலகில் 13 நாடுகளில் யானைகள் உள்ளன. 


அம்மு: ஹை நான் சொன்னது சரி பாத்தியா……..

அரவிந்த்: அத்த யானைக்கு இனிப்புதான் பிடிக்குமா? கரும்பு,வாழப்பழம் ன்னு நல்ல சாப்புடுதே?

ஹா ஹா,இல்ல இல்ல,மனிதர்கள் மாதிரி யானைக்கு சுவையுணர்வுகள் கிடையாது, ஏனெனில் யானைக்கு நாவில் சுவையரும்புகள் கிடையாது, மணம், மென்மை,சாறு அளவு,மற்றும் பசியை பொறுத்தே மூங்கில், கரும்பு,வாழைப்பழம் மாதிரி உணவுகளை விரும்பி சாப்பிடுகிறது.

அம்மு: ஏம்மா,அவ்வளவு பெரிய யானைக்கு சின்னதா கண்ணு இருக்கு?
அம்மு,நீ கேட்டது ரொம்ப சரியான  கேள்வி.யானையோட கண்ணு ரொம்ப சின்னது.பக்கவாட்டில் இருக்கிறதால நேர்கொண்ட பார்வை யானையால் பார்க்கமுடியாது,அதனால்,கூர்மையான கேட்பு சக்தியையும்,மிக நுட்பமான மோப்ப சக்தியையும் தான் நம்பி வாழ்கிறது.

அரவிந்த்&அம்மு: யானைக்கு மதம் பிடிக்குமா?



ஹாஹா,மதமெல்லாம் மனிதர்களுக்குதான் பிடிக்கும்.யானைக்கு எந்த மதமும் தெரியாது,
யானைக்கு  மதம்


அத்த ஜோக் சொல்லுது,மதம்னா என்ன அப்போ.

யானைக்கு மதம்

சுதந்தரமான காட்டு யானைக்கு மதம் என்பது அதன் உடலியலில் 

இயல்பான ஒரு கட்டம்தான்,

ஆண் யானைக்கு காதுக்கும், கண்ணுக்கும் இடையே உள்ள வீக்கமான பகுதியில் மதநீர், ஆண்டுக்கு ஒருமுறை வழியும். இதைதான் 'மதம்' என்கின்றனர். இது மூன்று மாதங்கள் வரை இருக்கும். 15 வயது முதல் 20 வயதுக்குள் மதம் பிடிக்க ஆரம்பித்து, 45 வயது வரை ஏற்படும். பெண் யானையுடன் சேர துடிக்கும்.அப்போது அதன் வாழ்க்கை புதுப்பிக்கப்படுகிறது என்று கொள்ளலாம்.

அம்மு: அம்மா,யானை குடும்பமா வாழும் ன்னு சொன்னியே அத 

சொல்லு,குட்டி யானை ஜாலியா இருக்குமா?



யானைகள் குடும்பம்




ஆமா,உங்கள மாதிரிதான்,குட்டி யானைகளும் செம ஜாலியா அதோட 

அம்மாவோட விளையாடும்,தண்ணியில குளிக்கிறதும்,விளையாடுறதும் 

அதுக்கு ரொம்ப பிடிக்கும். 






யானை கூட்டத்துக்கு பெண் யானைதான் குடும்பத் தலைவி. 

தும்பிக்கையால் தரையை தட்டி தட்டி பார்த்து வழி நடத்தி செல்லும், 

காட்டுக்குள்ள யானையை பிடிக்க ஏதாவது பள்ளமிருக்கிறாத என்பதை 

உறுதி செய்தபின்தான் காலடியை எடுத்து வைக்கும்.அதே மாதிரி 

காட்டுக்குள்ள தண்ணஈர் இல்லாத பஞ்ச காலத்தில்,தரையை 

தட்டிப்பார்த்து தண்ணீர் இருக்கிற இட்த்தை கண்டுபிடிச்சு அந்த இடத்தை 

தோண்டி தன் கூட்டத்திற்கு தண்ணீர் ஏற்பாடு செய்யும்.யானைகள் 

குடிச்சது போக மீத தண்ணீரை மற்ற விலங்குகளும் குடிக்கும்.

குட்டி யானைக்கு தண்ணீரை உறிஞ்சி குடிக்க தெரியாது ,அப்போ பெரிய 



யானைதான் தண்ணீரை உறிஞ்சி குட்டி யானையோட வாயில ஊத்தும்.

அரவிந்த்: அத்த,யானை எப்படி காட்டை விட்டு வந்தது?

ரொம்ப ஆண்டுகளுக்கு முன்பே அதாவது சங்க காலத்திலேயே 

காட்டனைகளை பிடித்து பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தினார்கள் 

அப்படிதான் யானை காட்டைவிட்டு வெளியில வந்தது……….
அம்மு: ஆப்பிரிக்கால யானை இருக்குன்னு சொன்னீயே! அது எப்படியிருக்கும்

சொல்றேன்.

ஆப்பிரிக்க யானை 

ஆப்பிரிக்க யானை 4 மீட்டர் நீளம் வரை உயரமும் சுமார் 7 டன் வரை எடையும் கொண்டு விளங்குகின்றது. ஆசிய யானையைப் பொருத்த வரையில் அளவில் ஆப்பிரிக்க யானையைக் காட்டிலும் உயரத்திலும் எடையிலும் றைவானதாகும். அதிக பட்சமாக 5 டன் எடை வரை இவை வளரக்கூடியன.

ஆப்பிரிக்க யானையின் காது அதன் தோல்புறத்தைக் முழுதும் மறைக்கும் முகமாக அமைந்துள்ளது. இவற்றின் காது 1.5 மீட்டர் நீளமும் 1.2மீட்டர் அகலமும் உடையது.

ஆசிய யானையின் காது அமைப்பு தோல் புறத்தை காட்டிலும் தாழ்ந்து அளவில் சிறியதாகவும் அமைந்துள்ளன. ஆப்பிரிக்க யானையின் ஆண் பெண் இரண்டிற்கும் தந்தம் வளர்ச்சியடைகின்றது. ஆசிய யானை வகைகளில் ஆண் யானைகளுக்கு மாத்திரமே தந்தம் வளர்ச்சியடைகின்றன. பெண் யானைகளுக்கு வளர்ச்சியே இல்லை என்று சொல்லுமளவிற்கு மிக சிறிய அளவிற்கே வளர்ச்சியடைகின்றது.


ஆப்பிரிக்க யானையின் தும்பிக்கையின் முனையில் இரு உதடைப் போன்ற பற்றி பிடிக்கும் தசைப் பகுதியும் ஆசிய யானையின் தும்பிக்கை முனை ஒரு பற்றிப் பிடிக்கும் தசைப் பகுதியும் அமையப் பெற்றுள்ளன. ஆசிய யானையின் கால்களின்
விரல் நகம் முன்காலில் 5 நகங்களும் பின்கால்களில் 4 நகங்களும்,

ஆப்பிரிக்க யானைகள் முன் கால்களில் 4 அல்லது 5 நகங்களும், பின்புறக் கால்களில் மூன்று நகங்களும் பெற்றுள்ளன. 

பொதுவாக யானைகள் வெளிர் சாம்பல் நிறத்தையுடையவனாவாக இருப்பினும் இவைகள் குளம் மற்றும் குட்டைகளின் சேற்று சகதிகளில் புரண்டெழுவதனால் சேற்றின் நிறத்திற்கொப்ப அடர் சாம்பல்,







ஆசிய மற்றும் ஆப்பிரிக்க யானைகளின் வேறுபாடு

          சிவப்பு, மற்றும் பழுப்பு நிறங்களிலும் காணப்படுகின்றது. நீளம் வரை உயரமும் சுமார் டன் வரை எடையும் கொண்டு விளங்குகின்றது. 

ஆசிய யானையைப் பொருத்த வரையில் அளவில் ஆப்பிரிக்க யானையைக் காட்டிலும் உயரத்திலும் எடையிலும் குறைவானதாகும். அதிக பட்சமாக 5 டன் எடை வரை இவை வளரக்கூடியன. 


அரவிந்த்& அம்மு: கும்கி யானை பத்தி சொல்லலையே,சினிமா பார்த்தோம்ல


கும்கி (Kumki) என்பது சிறைப்படுத்தப்பட்டுப் பயிற்சி அளிக்கப்பெற்ற இந்திய யானைகளின் உள்ளூர்ப் பெயர் ஆகும்.


பெரும்பாலும் இந்த கும்கி யானைகள் புதிதாக கைப்பற்றப்பட்ட காட்டு யானைகளை இயல்பான நிலைக்கு மாற்றவும் பயிற்சியளிக்கவும், மனிதக் குடியேற்றங்களில் வரும் காட்டு யானைகளை வழி நடத்தி காட்டுக்குள் அழைத்து செல்லவும் பயன்படுத்தப்படுகின்றன.

கும்கி பரவலாக இந்தியக் கோயில்களில் காணப்படும் இயல்பான யானைகள் இல்லை. ஒரு யானை விரிவான பயிற்சி மேற்கொண்ட பிறகுதான் கும்கி ஆக முடியும்.

அம்மு: ஏம்மா யானைக்கு காது இவ்வளோ பெருசா இருக்கு?

யானைக்கு உருவத்திற்கேற்ப அகன்ற காது மடல்களை கொண்டுள்ளன.அதன் வெப்பநிலையைப் பராமரிப்பதில் அகன்ற மடல்கள் பெரும்பங்காற்றுகின்றன. யானையின் மடல்கள் இரத்த நாளங்களால் நிரம்பியவை. மடல்களில் வெப்பம் மிகுந்த இரத்தம்,காதுகளின் இடைவிடாத அசைவினால் குளிர்விக்கப்படுகின்றது.இதனால் உடல் வெப்பத்தை யானை குறைத்தும் கொள்கிறது. ஆசிய யானையின் காது ஓரங்கள் வெளிப்புறம் மடிந்திருக்கும்.ஆப்பிரிக்க யானைக்கு உட்புறம் மடிந்திருக்கும்.


அரவிந்த்: அத்த உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?

        

பழக்கப்படுத்தப்பட்ட யானைகள்
நல்ல கேள்வி தம்பி,


ஹெச்.வில்லியம்ஸ் ந்னு ஒரு ஆங்கிலேய அதிகாரி,அவர் வேலை தொடர்பா,இந்திய மற்றும் பர்மா காடுகளில் அலைகிறார்,அப்போ அந்தமான் காடுகளில் யானையை உற்றுநோக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கிறது.முதலாம் உலகப்போரில் யானைகளை எப்படி மனிதன் பழக்கப்படுத்தியிருக்கிறான் என்ற வியப்பில் ஆழ்ந்த அவர் யானையை குறித்து நாட்குறிப்பேடு ஒன்றை ஆர்வமுடன் எழுதுகிறார்,அதையே பின்னாளில் யானைக்கூட்டம் என்ற புத்தகமாக வெளியிடுகிறார்.அந்த புத்தகமும்,அழியும் பேருயிர் யானைகள்-ச.முகம்மது அலி மற்றும் யோகனாந்த் அவர்களின் புத்தகம் மூலமும்தெரிஞ்சிக்கிட்டேன்.

அதோடு பரம்பிக்குளத்தில் உள்ள Information study centre ல் இருக்கும் முருகன் அவர்கள் கூறிய அரிய தகவல்களும் சேர்ந்த்துதான் இந்த செய்திகள்.

அம்மு: யானை புலியை கொல்லுமா?



                     
பொதுவா,யானை மாமிசம் உண்ணாது,ஆனால் புலி,அல்லது சிங்கத்தால் தொல்லைன்னா புலியை,சிங்கத்தை யானை கொன்று இருக்கிறது.ஆனா இளம் யானையைதான் பல சிங்கள் சேர்ந்து வேட்டையாடும் ,வளர்ந்த பெரிய உருவம் கொண்ட யானையை இவைகளால் வீழ்த்த இயலுவதில்லை.


அரவிந்த்:அத்த அன்னைக்கு படிக்கும்போது யானைமாதிரி நினைவாற்றல் இருக்கணும்னு சொன்ன அப்போ யானைக்கு மெமரி அதிகமா?

ஆமா,உண்மையிலும் உண்மை யானைக்கு மிகுந்த நினைவாற்றல் உண்டு


யானைக்கு நினைவாற்றல்,அறிவாற்றல் அதிகம்.ஒரு கூட்டு சமூகமாக வாழும் இவை தனது அறிவை சந்ததிக்கு கடத்துவதில் வல்லவை.தரையில் வாழும் உயிரினங்களிலேயே யானையின் மூளையே மிகப்பெரியதாகும்.ஐந்து கிலோ கிராமுக்கு சற்று அதிகமாக எடையை இது கொண்டிருக்கிறது. யானைகள் தங்களின் பல ஆயிர வருடங்களான வழித்தடங்களை,வலசைப் பாதைகளை மறக்காமல் அப்படியே நினைவில் வைத்திருக்கின்றன.

   




வழி மறக்காமல்  செல்லுதல்

அம்மு: யானை பிளிறும் ன்னு சொல்றோம்ல சத்தம் எவ்வளோ தூரம் கேட்கும்?


அருமையான கேள்வி.


மனிதர்களில் ஆண்களின் குரலின் ஏற்ற இறக்கம் 110Hz,பெண்ணின் குரலின் ஏற்ற இறக்கம் 220 Hz,குழந்தைகளின் குரலின் ஏற்ற இறக்கம் 300 Hz ஆகவும் இருக்கிறது (Fluctuates).


ஆனால் ஆண் யானைகள் 12 Hz,பெண் யானைகள் 13 Hz,குட்டி யானைகள்22 Hz.


அளவு குரலின் ஏற்ற இறக்கம் இருக்கும் .அதாவது மனிதனால் 20 Hz கீழுள்ள ஒலிகளை கேட்க முடியாது.


நம்ம செல்போன் ல ரிங்டோன் இருக்க மாதிரி நிறைய வகை ஒலிகளை எழுப்பகூடியவை யானைகள்.இதுல பாதியை நம்மால் கேட்க முடியாது. ஏன்ன 5 Hz லிருந்து 10000 Hz வரை ஒலி எழுப்பும்.



காட்டில் யானைகள் ஒலியெழுப்பும் போது


யானை எழுப்பும் ஒலிகள் இன்ஃபர்ஆ சோனிக் சௌண்ட்(INFRASONIC SOUND) மூலமாக தொடர்பு கொள்கிறது.இது 300 கி.மீ கடந்து அங்கிருக்கும் யானைக்கு கேட்குமென்று கூறுகிறார்கள்.அத்தகைய குரல்கள் மூலம் பருவமடைந்த பெண் மற்றும் ஆண் யானைகள் அழைப்பு விடுத்துக்கொள்ளுமென்றும் சொல்லப்படுகிறது.


யானைகள் மணிக்கு 32 கி.மீ/ 40கி.மீ வேகத்தில் ஓடக்கூடியது.

யானைக்கும் மனிதனுக்குமான மோதல்கள் பலநூற்றாண்டுகளாக தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.தந்தங்க்களுக்காவும்,மருத்துவ பயன் என்ற பெயரிலும்,பெரிய உருவத்தை அடக்கியாளும் எண்ணமும் யானையை விடாது துரத்துகிறது



யானைக்கோடு எனும் தந்தம்

அம்மு&அரவிந்த்: சில பொதுவான செய்திகளை சொல்லி இந்த கதய முடிக்கப்போறேன்.
  
யானைக்கு இவ்வளவு பெரிய உடல் இருந்தாலும் நன்றாக நீரில் நீந்தும். நாலரை மீட்டர்
  
ஆழத்திலும் நீந்தி செல்லும். மனிதன் எவ்வளவு நேரம் தண்ணீரில் மூச்சைப் பிடித்துக்கொண்டிருக்க முடியுமோ அவ்வளவு நேரம் யானையாலும் இருக்க முடியும்.


 
யானையின் எலும்பு கூடு

யானை மூச்சு விடுவது தும்பிக்கையால் தான் என்றாலும் வாசனை அறிவது வாயினால்தான்.


யானைக்கு வாசனை அறியும் நரம்புகள் அங்குதான் இருக்கின்றன. துதிக்கையால் பெரிய மரத்தையும் சாய்த்துவிடும் வலுவான தசைகளை பெற்று இருக்கிறது.

யானைகளிடம் விசித்திரமான பழக்கங்கள் உள்ளன. காட்டில் யானைகள் ஒன்றுடன் ஒன்று சண்டையிடுவதை பார்த்தால் வேடிக்கையாக இருக்கும். சண்டையின் போது களைப்பாக இருந்தால் சிறிது நேரம் ஓய்வு எடுத்துக்கொள்ளும். சிறிது நேரம் மேயும், தண்ணீர் குடிக்கும். 
பின்பு மீண்டும் சண்டையைத் தொடரும். இப்படியே பல நாட்கள் நீடிக்கும்.
 ஆசிய யானைகள் படுத்து புரள்வது உண்டு. ஆப்பிரிக்க யானைகளோ எப்போதும் படுப்பதில்லை. நின்று கொண்டேதான் தூங்கும். யானை என்று படுக்கிறதோ அன்று அதன் மரணம் நெருங்கி விட்டது என்று அர்த்தம். யானைப் படுத்தால் அது மரணப்படுக்கை தான். .
  

யானை படுக்கையில்


சரி,யானையை பற்றிய மற்ற செய்திகளை வேறொரு நாள் பேசலாம்.

ஆனால் பாருங்க நண்பர்களே……




யானை தன் குட்டியுடன்



எந்த நாட்டில யானை இல்லையோ அவர்களே யானையை பற்றி 

கவலைப்படுகிறார்கள்.ஆனால் நாம்,யானைகளின் இருப்பிடமான காட்டை 

அழித்தும்,யானைகளை அழித்தும் நமக்கான அழிவை தேடிக்கொள்கிறோம்

யானைகள் இருந்தால் மட்டுமே மழைக்காலமும்,குயிலோசையும் 

இருக்கும்.

அன்புடன் லீலா