Saturday 30 July 2016

புலி வருது…...புலி வருது…….


அனைவருக்கும் வணக்கம்,

இன்னைக்கு புலி பற்றிய கதையை என் மகள் அம்முவிற்கு சொல்லும்போதே நீங்களும் கேட்டுக்கங்க…….

என்ன எல்லோரும் தயாரா,முறுக்கு,கடலை எல்லாம் வாங்கி வச்சிக்கோங்க

அம்மு வா வா….கதை ரெடி………..


                தேசிய விலங்கு 
                
அம்மு: வந்திட்டேன்,அம்மா! புலி நம் தேசிய விலங்குதானே…..தெரியும்      ஆனா அது என்ன சாப்பிடும்? எங்கேயிருக்கும்? காட்டுக்கு ராஜா சிங்கந்தானே அப்புறம் ஏன் புலிய தேசிய விலங்கா வச்சாங்க

சொல்றேன்,சரியா சொன்ன புலி நம் தேசிய விலங்கு,ஏன் சிங்கத்த வைக்கலைன்னு நானும் உன்ன மாதிரிதான் யோசிச்சேன் அம்மு.

"புலி பசிச்சாலும் புல்லை தின்னாது"

புலிகளோட பூர்வீகம் கிழக்கு மற்றும் தெற்கு ஆசியா,கிழக்காசிய நாடுகளில் புலியைதான் காட்டுக்கு அரசன் என்று சொல்வாங்க,புலியோட நெற்றியில்

王அடையாளம் போல இருக்கும்அது சீனா எழுத்தில் அரசன் என்பதை குறிக்கும்.

வரலாற்றில் புலிக்கும் சிங்கத்திற்கும் இடையிலான போர்களில் புலியே பெருமளவில் வெற்றிபெற்றுள்ளது.அதனாலதான் புலி தேசிய விலங்கா இருக்கும்னு நினைக்கிறேன்.

அம்மு: ஆமா,எப்போ பாத்தாலும் ஆனை கத சொல்லுவ,இன்னைக்கு ஏன் புலி கத சொல்ற?

நல்ல கேள்வி கேட்ட, என்ன நண்பர்களே உங்களுக்கும் இந்த சந்தேகம் இருக்கா?

ஜூலை 29 சர்வதேச புலிகள் தினம்,அதனாலதான் புலி கதை,உனக்கும் புலி தானே favourite animal அதனாலதான் புலி கதை,

அம்மு: அம்மா! புலி மேல கோடு இருக்குல அத பத்தி சொல்லும்மா.

புலியோட நிறம் ஆரஞ்சும் மஞ்சளும் கலந்த மாதிரி ஒரு நிறம் அது மேல கறுப்பு கோடுகள் இருக்கும்.

அடடே அரவிந்த் வா வா….

அரவிந்த்: அம்மு எப்படியிருக்க என்ன அத்தை,புலி கத சொல்றீயா?

ஆமாம் அரவிந்து.

அம்மு: நல்லயிருக்கேன்,நீ மாமா,அத்தை எல்லாம் எப்படியிருக்காங்க

அரவிந்த்:எல்லாரும் நல்லாயிருக்கோம்,சரி புலிக்கு ஏன் புலின்னு பேர் வச்சாங்க சொல்லு அத்த,

அம்மு,மற்றும் நண்பர்களே கேட்டுக்கங்க நீங்களும்

"டைகர்" என்ற சொல் "தீகிரிஸ் " என்ற இலத்தீன் சொல்லிலிருந்து பெறப்பட்டுள்ளது. இந்தக் கிரேக்கச் சொல்லானது பாரசீக மொழியில் அந்த விலங்கின் வேகத்தைக் குறிப்பிடும் வகையில் "அம்பு" எனப் பொருள்படும் சொல்லிலிருந்து பிறந்திருக்கலாம். மேலும் டைகிரிஸ் என்ற நதியின் பெயரிலிருந்தும் பிறந்திருக்கலாம்.

பாந்தெரா என்ற சொல்லானது செம்மொழிகளின் வழியாகவே ஆங்கிலத்திற்கு வந்திருந்தாலும் பெரும்பாலும் அது கிழக்கு ஆசியாவில் தோன்றியதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அதன்படி இச்சொல்லுக்கு "மஞ்சள் நிற விலங்கு" அல்லது "வெளிர் மஞ்சள்" எனப் பொருள்.புலி குறிஞ்சி திணைக்குரியது.

அம்மு: அம்மா புலி என்ன சாப்பிடும் சொல்லவேயில்லையே.


சொல்றேன் சொல்றேன்..

புலி சரியான non vegetarian தெரியுமா?

அரவிந்த்: என்ன அத்த, சிக்கன் பிரியாணி சாப்பிடுமா?



ஹாஹா இல்லை இல்லை,இது உயர்நிலை ஊணுன்னி,அதாவது மான்கள், காட்டெருமைகள்,காட்டு பன்றி,இளம் யானைகள்,கரடி,ஆடு,மாடுகள் இவையெல்லாம் இதோட உணவு,மனுஷன கொல்லாது ஏன் தெரியுமா? மாமிசம் கம்மியா இருக்கும்

.



ஒரே நேரத்தில் 18 முதல் 20கிலோ எடையுள்ள மாமிசத்தை சாப்பிடும்.


3-4 நாட்களுக்கு 50-80 kg மாமிசம் சாப்பிடும்


அம்மு:அப்போ தண்ணி எப்படி குடிக்கும்?


ஆமாம், அம்மு உன்ன மாதிரிதான்,புலிக்கும் தண்ணில விளையாட ரொம்பவே பிடிக்கும்,




அதனால தண்ணி உள்ள இடத்துக்கு போய் விளையாடிட்டு,தண்ணி குடிக்கும், அப்புறம் கரையில படுத்து கிடக்கும்,அங்கே வர விலங்குகளை தண்ணியில தள்ளி வேட்டையாடும்.

அம்மு& அரவிந்த்: ஆமா,ஆமா,ஜங்கில் புக் படத்தில வருமே பார்த்திருக்கோம். அது எவ்வளவு length and weight இருக்கும்.

புலி செமையா கொழுத்த உடலும்,4மீ நீளமும்,300kg எடையும் இருக்கும்.இது ஆண் புலி,பெண் புலி அளவில் ஆண் புலிய விட சற்று குறைவா இருக்கும்,கிட்ட்தட்ட 9-10 மீ உயரம் வரை தாண்டும்,60 கி.மீ வேகத்தில் ஓடும்.


          பாயும் புலி                                                                           பாயும் புலி


அரவிந்த்: அத்த,புலி எவ்வளவு நாள் இருக்கும்?


நீ அதோட ஆயுட்காலத்தை பற்றிதானே கேட்கிறே? புலி சுமார் 15 முதல் 25 வருடங்கள் வரை உயிர் வாழும்.வயதான புலிக்கு வேட்டையாடுறது கஷ்டம் அப்போதான் மனுஷன சாப்பிடும்.

அம்மு: அம்மா,புலி காட்ல இருக்கும்னு சொல்ற அதோட வீடு குகையா? எவ்வளவு பெருசா இருக்கும்?


புலிகள் சுமார் 30 மைல் வரை தன்னோட எல்லையா வச்சிருக்கும்,மற்றப்படி உணவிற்காக எல்லையை விரிவுப்படுத்த தேவைப்பட்டால் விரிவுப்படுத்திக்கொள்ளும்,ஒரு புலியோட எல்லைக்குள் இன்னொரு புலி வந்தால் சண்டைதான் நடக்கும்,புலி தனியாதான் வேட்டையாடும்.புலி தனியாதான் வாழும்.



என்ன நண்பர்களே! குட்டீஸ்கள் செம கேள்வி கேட்கிறாங்க,கொஞ்சம் டீ,முறுக்கு சாப்பிட்டு தொடர்வோமா?

வந்தாச்சு,வந்தாச்சு, டீ,கடலை,சோளபொறி,முறுக்கு,எல்லாம்.

அரவிந்த்: அத்த அம்மு ஏன் டீ குடிக்க மாட்டேங்குது?ஜூஸ் தானா? டீ குடிச்சா கறுப்பாயிடுவாங்கன்னு சொல்லது உண்மையா அத்த?


தம்பி! அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை,நீ குடி,

அம்மு: டீ பத்தி கத சொல்லு


து இன்னொரு நாள் சொல்றேன்,சரி இப்போ டீ குடிக்க நண்பர்கள் எல்லாம் வந்தாச்சு,அப்படியே முறுக்க நொறுக்கிட்டே கதைய கேளுங்க.

எங்க விட்டேன்……………

அதான் தனியாதான் வேட்டைக்கு போகும்.


ஆங்.. தனியாதான் வேட்டைக்கு போகும்


,30 அடி தூரத்தில் இரை இருந்தாலும் குறி தவறாமல் பிடிச்சுடும்.இரையோட பின் கழுத்தை பிடிச்சு முதுகெலும்பை உடைச்சு,சுவாசத்தை நிறுத்திடும்.



அம்மு&அரவிந்த்: அய்யோ பயமாயிருக்கு,நைட் தான் வேட்டையாடுமா? எப்படி கண்ணு தெரியும்?

என்ன நண்பர்களே,உங்களுக்கும் இந்த சந்தேகம் இருக்கா?எனக்கும் இருந்தது. இப்போ பதில் தெரியும் சொல்றேன் கேளுங்க.

புலியோட கண்ணுல டபீடம் லூசிடம்மால் அப்படின்னு ஒரு சூப்பர் டூப்பர் லேயர் இருக்கு,அதாவது ஸ்பெஷல் லேயர்,அதனால மனுஷன விட ஆறு மடங்கு நல்லா பார்க்கும் திறன் புலிகளுக்கு இருக்கு.



                             இரவில் பளபளக்கும் கண்கள்.

அரவிந்த்: அத்த,அப்போ பகல் ல வேட்டையாடதா?

வேட்டையாடும் ஆனா,அதுக்காக நிறைய சக்தியை செலவு செய்யணும்,பகலில் மற்ற விலங்குகள் ரொம்பவே உஷாரா இருக்கும்.அதனால புலியார் என்ன செய்வார்னா? எல்லா விலங்குகளும் ஓய்வெடுக்கும் இரவு நேரத்தை வேட்டையாட பயன்படுத்திக்குவார்.

அம்மு: ஏம்மா,பூனைக்கு நைட்ல கண்ணு பளபள ந்னு மின்னுதுல அத மாதிரி புலிக்கும் இருக்குமா?

சரியா கேட்ட, புலி பூனையினத்தை சேர்ந்த்துதான்,ஏற்கனவே சொன்ன டபீடம் லூசிடம்மால் தான் இந்த பளபளபிற்கும் காரணம்

என்ன நண்பர்களே,புலிய பார்த்திருக்கீங்களான்னு கேட்கிறீங்களா? Zoo லயும்,சரணாலயத்திலேயும் பார்த்திருக்கேன்,ஆனா,காட்டு புலி(untamed wild tiger) பார்த்தது இல்ல,புரியுது புரியுது……………

பார்த்திருந்தா,கத சொல்ல நான் இருந்திருக்க மாட்டேன் பயத்திலேயே போயிருப்பேன்.

ஆனா,இப்படி காட்ல புலிகளை பார்க்க முடியாதாதற்கு காரணம் புலிகளோட எண்ணிக்கை நாளடைவில் குறைந்து வருவதுதான் காரணம்.

ஏன் குறைஞ்சுது? பார்ப்போம்…………



ஜார்ஜ் v அவர் மனைவியும்,வேட்டையாடிய புலியுடன்


எந்த புலி தேசிய விலங்கு அப்படின்னு பெருமையா சொல்றோமோ,அந்த புலிய ஓட ஓட விரட்டியிருக்காங்க,முறத்தால் புலியை அடிச்ச வீர தமிழச்சியில் இருந்து,பொழுது போக்குக்காக பல விலங்குகளை வேட்டையாடிய ஆங்கிலேயே துரைமார்கள்,அவர்களுக்கு துணை போன ஜமீன்தார்கள் என துரத்தியவர்களின் எண்ணிக்கை எண்ணிலாடங்கா,ஒவ்வொவ்வொரு முறையும் 10 புலிகளுக்கு குறைவில்லாமலும்,40 மற்ற விலங்குகளுக்கு குறைவில்லாமலும் வேட்டையாடியிருக்கிறார்கள்,பொழுது போக்கு மெல்ல சாகச விளையாட்டு ஆகவும், வீரத்தின் அடையாளமாகவும் மாறியது.


       ஆங்கிலேயர்கள் வேட்டையாடிய புலியுடன்

இதன் காரணமாக, 40000க்கும் மேலாக இருந்த புலிகள் இன்று ஆயிரம் அளவிற்கு குறைந்துவிட்டது.அதோடு மட்டுமில்லாமல்,நகர்மயமாகுதல்,மற்றும் தொழிற்சாலைகளின் பெருக்கத்தால்,காடுகள் பெருமளவு குறைந்ததும் பெரும் காரணம்.
மேலும்,புலியின் தோல்,நகம்,பல்,பால்,முடி என அனைத்து பகுதிகளும் மருத்துவ குணமிருப்பதாக நம்பப்படுகிறது,அதனாலேயும் இதை வேட்டையாடி கொல்றாங்க....



           வேட்டையாடிய புலியுடன் நம் நாட்டை சூறையாடியவர்கள்

அம்மு: புலி குறைஞ்சிடுச்சுன்னு எப்படி கண்டுபிடிச்சாங்க?

அடடா,எவ்வளவு பெரிய கேள்வி அசால்டா கேக்குற,கவனி செல்லம்,

புலிகளின் கால் தடத்தின்(pug mark) எண்ணிக்கையை கொண்டு முதலில் கணக்கிட்டாங்க,ஆனா இது சரியான தகவலாக இல்லை.ஏன்னா? சேறு போன்ற பகுதிகளில் நடக்கும்போது கால் தடம் சற்று விரிந்தும்,மணல் பகுதிகளில் கால் எடுத்தவுடன் மணல் சரிந்து,கால் தடத்தின் அளவு,ஒரு குழப்பத்தை கொடுத்தது,அதனால Camera Traps என்ற முறையில் Trail camera பயன்படுத்தி எண்ணினார்கள்.


             புலியின் காலடி தடம் சேறில் புலியின் காலடி தடம் மணலில்


அரவிந்த்: ஒரே புலி அதே வழியா,நிறைய முறை நடந்து போனா எப்படி கண்டுபிடிப்பாங்க?


செல்லப்பா, அருமையான கேள்வி, புலிக்கு இருக்குற கோடு கண்டிப்பா இன்னொரு புலியோட ஒத்து போகாது,கோடுகள் நம்முடைய கைரேகை மாதிரி,


ஒவ்வொவ்வொரு புலிக்கும் மாறும்.


      புலிகளின் உடல் கோடுகளின் வேறுபாடுகள்

அம்மு: புலி சில படத்தில சிரிக்கிற மாதிரி போட்டுருக்காங்க? புலி கோப பட்டா எப்படி தெரியும்.

நல்ல கேள்வி,புலியோட காதுகளுக்கு பின்னாடி வெள்ளை நிறத்தில ஐஸ்பாட்ஸ் இருக்கும்,காது கறுப்பு நிறத்தில் இருக்கும்.கோபம் வரும்போது காதுகள் உடம்போடு ஒட்டிக்கொள்ளும் அப்போ அந்த வெந்நிற ஐஸ்பாட்ஸ் நமக்கு தெரியும், எஸ்கேப் ன்னு சொல்லி ஓடிடணும்…………….

அரவிந்த்: அத்த,புலிக்குட்டி பத்தி சொல்லு

ஒரு புலி ஒரே நேரத்தில் 2 முதல் 6 குட்டிகள் வரை போடும்,குட்டிகள் பிறந்தவுடனயே,குட்டிகளோட பாதுக்காப்பு கருதி அப்பா புலிய தன்னோட எல்லையை விட்டு வெளியேற்றிவிடும் பெண் புலி,திரும்ப வந்தாலும் எல்லைக்குள் விடாமல் துரத்திடும்…


                         புலி அதன் குட்டிகளுடன்

குட்டி புலிகளுக்கு தந்தை புலியே எதிரிதான்.

அம்மு: அம்மா! புலின்னாலே பயமாயிருக்கு அத சாகடிச்சாங்கன்னு ஏன் ரொம்ப கவலைப்படுற.


1807 இலண்டனில் வெளியிடப்பட்ட சாமுவேல் ஹாவெட் & எட்வர்டு ஓரம் தங்கள் கைகாளல் வரைந்த தண்ணீர் கலரில் செதுக்கிய சித்திரங்களானது காட்டு நாய்கள் புலியை வேட்டையாடுவதை விளக்குகின்றது.


புலிகளை Predators ன்னு சொல்வாங்க,இவங்க தான் காடுகளில் இருக்கிற மற்ற உயிரின்ங்களின் எண்ணிக்கையை சமன் படுத்துவாங்க,இவங்க இல்லைன்னா,தாவரங்களை மட்டும் உண்ண கூடியவங்க பெருகிடுவாங்க,அப்போ காட்டுல இருக்கிற செடி,கொடி,மரங்க இவங்களுக்கு பத்தாம போய்டும்,அதனால இயற்கையிலேயே உணவு சங்கிலி சரியான முறையில இருக்கவும்..Ecology cycle சரியா இயங்கவும் இவங்க வேணும்.அப்போதான் காடு காடாயிருக்கும்.


என்ன நண்பர்களே,புலிகளின் வகைகள் பற்றி பட்த்துடன் பார்ப்போமா.

வங்கப்புலி அல்லது வங்காள அரசப்புலி:


இவ்வகை புலிகள் இந்தியா,வங்காள தேசம்,நேபாளம்,பூடான் மற்றும் பர்மா ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன. இதன் வெவ்வேறு வாழ்விடங்கள்: புல்வெளிகள், துணை வெப்பமண்டல மற்றும் வெப்பமண்டல மழைக்காடுகள், புதர்க்காடுகள், ஈரப்பத மற்றும் வறண்ட இலையுதிர்க்காடுகள் மற்றும் சதுப்புநிலங்கள் ஆகும். பொதுவாகக் காடுகளில் உள்ள ஆண்புலிகளின் எடை 205 முதல் 227 கி.கி (450-500 பவுண்ட்) ஆகவும், பெண்புலிகளின் சராசரி எடை 141 கி.கி வரையிலும் இருக்கும்.[ இருப்பினும், வட இந்தியப் புலிகளும் வங்கப்புலிகளும் இந்தியத் துணைக்கண்டத்தின் தென்பகுதிகளில் காணப்படுபவற்றை விடச் சற்று கொழுத்தவையாக உள்ளன. 1972 ஆம் ஆண்டு முதல் வங்கப்புலிகளைப் பாதுகாக்க புலிகள் பாதுகாப்புத் திட்டம் எனப்படும் அரிய வனவிலங்குப் பாதுகாப்புத் திட்டம் நடைமுறையில் உள்ளது.


                       வங்கப்புலி

இந்தியசீனப் புலி :

இப்புலிகள் கம்போடியா,சீனா,பர்மா,லாவோஸ்,தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன, மலைகள் அல்லது உயரமான பகுதிகளில் உள்ள காடுகளே அவற்றின் விருப்பமான வாழ்விடங்களாகும். இந்தப் புலிகள் வங்கப்புலிகளை விடச் சிறியதாகவும் கருப்பாகவும் இருக்கின்றன.


                             இந்தியசீனப் புலி

 மலேயேப் புலிகள்:
மலாய் தீபகற்பகத்தின் தெற்குப்பகுதியில் மட்டுமே காணப்படுகின்றன.


                                    மலேயேப் புலிகள்

சுமத்திராப் புலி
(பாந்தெரா டைகிரிஸ் சமத்ரயி), இது இந்தோனேசியாவின் சுமத்ராதீவில் மட்டுமே காணப்படுகின்றது. மேலும் மிகவும்ஆபத்தானது வாழும் புலியின் கிளையினங்கள் அனைத்திலும் மிகச்சிறியது, வயதுவந்த ஆண்புலிகளின் எடை 100 - 140 கி.கி (220–308 பவுண்ட்) மற்றும் பெண்புலிகளின் எடை 75–110 கி.கி (154–242 பவுண்ட்).[27] அவற்றின் இந்தச் சிறிய அளவானது அவைகள் வாழும் சுமத்ரா தீவின் கடினமான அடர்ந்த காடுகளுக்கு ஏற்றதாகவும் அதே போல் சிறிய இரைக்கு ஏற்ற வகையிலுமே அமைந்துள்ளது. காட்டில் இவற்றின் எண்ணிக்கை 400க்கும் 500க்கும் இடைப்பட்டதாக இருக்கும் என்று தோராயமாகக் கணக்கிடப்படுகிறது

.
                         சுமத்திராப் புலி

சைபீரியன் புலி: (பாந்தெரா டைகிரிஸ் அல்டைகா), இது அமுர், மஞ்சுரியன், அல்டைக், கொரியன் அல்லது வடக்கு சீனப் புலி என்றும் அறியப்படுகிறது. இது கிழக்கு சைபீரியாவின் தூரத்தில் உள்ள பிரிமோர்ஸ்கை க்ரையின் பகுதியான அமுர்-உஸ்ஸுரிமற்றும் ஹபரோவ்ஸ்க் க்ரை ஆகியவற்றுக்குள் தற்போது பாதுகாக்கப்பட்டுள்ளது. இதுவே மிகப்பெரிய கிளையினமாகக் கருதப்பட்டது

                               சைபீரியன் புலி

தென்சீனப் புலி
(பாந்தெரா டைகிரிஸ் அமோயேன்சிஸ்), அமோய் அல்லது ஜியாமென் புலி என்றும் அறியப்படுகிறது. இது புலியின் கிளையினங்களில் மிகவும் அதிக ஆபத்தானது மற்றும் உலகின் அதிக ஆபத்தான 10 விலங்குகளில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.

1977 ஆம் ஆண்டில் சீன அரசாங்கம், காடுகளில் உள்ள புலிகளைக் கொல்லுவதைத் தடைசெய்ய ஒரு சட்டத்தைப் பிறப்பித்தது. ஆனால் இச்சட்டம் கிளையினத்தைக் காப்பதற்கு மிகவும் தாமதமாகப் பிறப்பிக்கப்பட்டுவிட்டது. ஏனெனில் அது ஏற்கனவே காடுகளிலிருந்து அழிந்துவிட்டது. சீனாவில் தற்போது 59 தென்சீனப் புலிகள் சிறைப்படுத்தப்பட்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது. ஆனால் இவை ஆறு விலங்குகளிலிருந்து உருவானவை மட்டுமே என அறியப்படுகின்றன. ஆகவே கிளையினத்தைத் தக்கவைப்பதற்குத் தேவையான மரபியல் வேறுபாடு இப்போது இல்லாமல் போய்விட்டிருக்கலாம். தற்போது இந்தப் புலிகளைக் காடுகளில் மறுபடியும் உருவாக்க அங்கு இனப்பெருக்க முயற்சிகள் நடைபெறுகின்றன.



                             தென்சீனப் புலி

அழிந்துவிட்ட இனங்கள்:

பாலினேசி புலி

ஜாவாப்புலி



வேற்று நிற புலிகள்:

வெள்ளை நிறப்புலிகள்:
நன்கு அறிந்த மரபணு சடுதி மாற்றத்தால் உருவாக்கப்பட்டது. தொழிநுட்பப்படி அது சின்சில்லா அல்பினிஸ்டிக்என்று அறியப்படுகிறது. இது காடுகளில் அரிதாக இருந்தாலும் அதன் பிரபலத்துக்காக விலங்கியல் பூங்காக்களில் அதிகம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. அவை அவற்றின் வெள்ளைச் சாயலில் மட்டுமே மாறுபடவில்லை. அவை ஊதாக் கண்கள் மற்றும் இளஞ்சிவப்பு நிற மூக்குகளையும் பெற்றுள்ளன








தங்கநிறப் பட்டைப் புலிகள்:


கூடுதலாக மற்றொரு ஒடுங்கிய பண்பு மரபணுவானது, மிகவும் வழக்கத்திற்கு மாறான "தங்கநிறப் பட்டை" நிற வேறுபாட்டை உருவாக்கலாம், சிலநேரங்களில் அது "ஸ்ட்ராபெர்ரி" எனவும் அறியப்படுகிறது. தங்கநிறப் பட்டைப் புலிகளானது வெளிர் தங்கநிற மென்மயிர், வெளிரிய கால்கள் மற்றும் மங்கிய ஆரஞ்சுநிறப் பட்டைகளையும் கொண்டுள்ளன. அவற்றின் மென்மயிரானது பெரும்பாலும் இயல்பைவிட சற்று கடினமானதாக இருக்கும். தங்கநிறப் பட்டைப் புலிகளின் எண்ணிக்கை மொத்தம் 30

இப்படி நிறைய கதைகள் சொல்லாலம்,ஆனாலும் புலிகள் நம்மை துரத்தியதை விட நாம் தான் புலிகளை துரத்தியிருக்கிறோம்.





சரி அம்மு,அரவிந்த், நம்மோட கதை கேட்ட நண்பர்களுக்கு நன்றி சொல்லுங்க.


அம்மு&அரவிந்த்:நன்றி அனைவருக்கும்.


நண்பர்களே அடுத்த வேறொரு தகவலோடும் ,கதையோடும் வருகிறேன்.



அன்புடன் லீலா.

1 comment:

  1. Hi,friends,now you can comment directly in the blogspot itself.

    ReplyDelete