Monday 15 January 2018



குடை குடையாய் பூத்திருக்கு
மழையை எண்ணி காத்திருக்கு
கறுத்த மேகம் திரளுமோ
கனத்த மழை பெய்யுமோ
புல்லு பூண்டு நனையுமோ
பச்சை கம்பளம் விரியுமோ
எண்ணம் விரியுது குடையென
மழையை நினைக்கும் மனதிலே
மழை விலகி நிற்குதோ
ஒற்றை குடையின் கீழே
மக்கள் வரவே நினைக்குதோ
பெண்வதை யாவும் தீரவே
ஆணின் மனம் குடையென
விரிய மழை காத்திருக்குதோ
மடக்கிய குடையென மூலையில்
உறங்கி கிடக்கும் நியாயமும்
மழைநாள் குடையென யாவருக்கும்
விரியவே ஏங்கி நிற்குதோ
மனப் பூக்கள் மலரட்டும்
மழை பூமியைத் தொடட்டும்
மண்ணும் மகிழ்ந்து குளிரட்டும்
நல்லது செய்து வாழந்திட
நலங்கள் நாடி சூழ்ந்திடும்.
-கோ.லீலா.

No comments:

Post a Comment