Monday 15 January 2018

யானை.....



ஆனை வருதென்றால்

குழந்தையா ஆராவரம் செய்ற

நான் அடிமைப்பட்டு கிடப்பதை

நீ எங்க நினைக்கிற

நான் வனத்தின் கம்பீர பிராணி

வனத்தை கட்டும் நிர்மாணி

முப்பத்தி மூணு சதவீதம்

இருக்க வேணும் காடு

அதுதானே எங்களோட வீடு

காடு கடத்தி விடுகிறாய்

எங்களை பிச்சை எடுக்க விடுகிறாய்

சுடும் சாலையில் நடக்க விடுகிறாய்…

தந்தம் எண்ணி விற்கிறாய்

பட்டையை நீ போடுகிறாய்

பாதம் வைத்தும் வைக்கமாலும்

நாமத்தை நீ சாத்துகிறாய்

உன் மதம் என்மேல் ஏற்றுகிறாய்

பிடி பெருமையோடு வழிநடத்த

பிரிவினை ஏதுமின்றி வாழும்

ஆனைக் கூட்டம் நாங்க

.மனிதா! நீ பழசை மறக்கிறாய்

என் வலசையை மறைக்கிறாய்

காடுக்குள் ஊடுருவது ஊரு

நான் நகருவது ஊருக்குள்ளா?

எட்டா மரப்பட்டை உரிப்பேன்

வயிற்றுக்குள் போட்டு அரைப்பேன்

பாதிப் போக பாதியை சாணமிடுவேன்

சாண, வழி எட்டா மரம் கிட்டும்

பட்டாம் பூச்சிக்கும் பலவகைக்கும்

மகரந்த சேர்க்கை நடந்திட

காடு செழித்து வளர்ந்திடும்

-கோ.லீலா.

No comments:

Post a Comment