Wednesday 7 February 2018

சாதி....





சாதிகள் இருக்குதடி பாப்பா
சண்டை மூட்ட பார்க்குமடி பாப்பா
சாய்த்துவிட துடிக்குமடி பாப்பா
அன்போடு ஞானம் நீ பெற்றாலும்
அவைதனில் பின் தள்ளுமடி பாப்பா
பொறாமை தீயில் சாதி மனம்
வெந்து தணியுமடி பாப்பா.
அச்சம் தவிர்த்திடு பாப்பா
அறிவாலே வென்றிடு பாப்பா
சாதி அருகிலே அமர்ந்திருக்கும்
புன்னகைக் கூட பூக்கும்
அயர்ந்தால் பள்ளம் பறிக்கும்
பயந்து விடாதே பாப்பா.
பாய்ந்து முறித்து விடு பாப்பா
படித்தவனும் மூடனாவன்
சாதி என்கையிலே சத்தியம் மீறுவான்
மிரண்டு விடாதே பாப்பா.
கவிதையிலும் கதையிலும்
சாதியில்லையென எழுதும்
கூட்டமொன்று உண்டு பாப்பா
நேரில் உயர்வு தாழ்வு கொள்ளுமது பாப்பா
கவனமாயிருந்து சாதித்திடு பாப்பா
பாரதி வந்தாலும் இதையே
அவர் மொழியில் சொல்லுவார் பாப்பா
தண்ணீருக்கு சாதி மண்ணுக்கு சாதி
மணம்புரிய சாதி காதல் கொய்ய சாதி
வெல்ல  சாதி கொல்ல சாதி
உதவ சாதி சுடுகாட்டிலும் சாதி
இவன் தூவும் பூவிலும் சாதி
இருந்தாலும் அயராதே பாப்பா
எங்குமிருப்பதால் காற்றல்ல பாப்பா
களையவேண்டிய களையது பாப்பா.


-கோ.லீலா.

No comments:

Post a Comment