Tuesday 1 June 2021

When the River Sleeps

 Book : When the  River Sleeps

Author : Easterine Kire


நாகாலாந்தின் அங்கமி (Angami) எனும் பழங்குடியினரான Vilie, உறங்கும் ஆற்றை நோக்கி, அந்த ஆற்றில் Heart- stone ( it was guarded by a ferocious widow spirit) ஐ எடுக்க பயணிக்கும் காட்டு வழிப் பயணத்தின் விவரிப்பும், Heart - stone. னின் சக்தியும், அதனால், அதை உடமையாக கொள்பவர் எதிர்நோக்கும் தொல்லைகளும் கதையாக விரிந்துள்ளது.


காட்டைப் பற்றி சுருக்கமாகவே சொல்லப்பட்டிருகிறது... இன்னும்‌ கொஞ்சம் கூட கூடுதலான விவரணைகள் இருந்திருக்கலாம், நாகாலாந்து பற்றிய பிம்பம் இதில் பெரிதாக இல்லையென்றாலும், நேபாளி செட்டில்மெண்ட்டில் நடக்கும் இரட்டை கொலைகள் மூலம் ஒரு உப செய்தியை கடத்தி இருக்கிறார்.


நாகாலாந்த் எனும் இனிய சிறு பூமியில் வாழும் மனிதர்களின், முன்னோர்களின் ஆவி மீதான நம்பிக்கை, சடங்குகள், கெட்ட ஆவி, விலங்குகளின் ஆவி, ஆவி அழகிய பெண்ணாக நீண்ட கூந்தலுடன் ஆண்களை மயக்குதல்,மனிதர்களின் பழி வாங்கும்‌ குணம், அன்புக்காக ஏங்குதல், அன்பாக இருத்தல், காட்டில் வாழும் மனிதர்களுக்கே உரிய உபசரிப்பு,பிறழ்வுகள், பேராசை, விரக்தி, தனிமை, கபடு, குரூரம், ஆனந்தம், தூய்மை என்று எல்லா மனிதப் பிராந்தியங்களின் சிக்கலான கலவையின் ஊடாக கதை பயணிக்கிறது.


ஆற்றிலிருக்கும் மந்திரக்கல்லை எடுப்பது மட்டுமல்லாது, Travel of a man from Ignorance to Experience ஆக இக்கதை ஒரு பரிமாணத்தையும்  கொண்டிருக்கிறது.


Vilie காட்டை மனைவியாக மணந்து கொண்டதை சொல்லும்‌ இடங்களில், காட்டின் மீதான எனது possessiveness தலைதூக்குவதை தவிர்க்க முடியவில்லை.


ம்ம்ம்... காட்டை ஆண் என்றும் பெண் என்றும்‌ பாகுபடுத்தி பார்ப்பதில்லை, தோன்றும்போது ஆணாகவும், தோன்றும்போது பெண்ணாகவும் காண்பேன்.  ரகசியா எனும் பொது பெயர் இட்டிருந்தாலும், பெண்ணாகவே பாவிக்கப்படும் காடு,கவிதைக்கு காதலானகி விடும்...


காட்டின் மீதான காதல் அலாதியானது, முரட்டு காதலன்/ காதலி, காதலிக்க தொடங்கி விட்டால் மீண்டு வரமுடியாது, மீளவும் வேண்டாமே !


Vilie ஆகவே மாறி கதையில் பயணிக்க முடிகிறது, காட்சிகள் விரிய எனக்கான காடு, ஆறு, தற்காலிக குடில்கள், செட்டில்மெண்ட்,‌ அடர் மரங்கள், unclean forest, nettle forest, உருவாக அதனுள் பயணிக்க வாய்த்தது.


genna day கிறித்துவ மதத்தில் ஒரு சாரார் வாரவாரம் ஞாயிற்றுக்கிழமையில் கடைபிடிக்கும் முறைகளை நினைவூட்டியது, கூடவே எதன் நீட்சி எது என ஆராய தொடங்கிவிட்டது மூளை.


மூலிகை, மற்றும் மரப்பட்டைகள், வேர்கள் குறித்து மிக சொற்பமாகவே சொல்லப்பட்டு இருப்பதாக தோன்றியது, எனினும் குற்ற உணர்வு நீங்க தரும், மரப்பட்டை போட்டு கொதிக்க வைத்த நீர் புதுத் தகவல்.


Ate, Zote இருவரையும் சந்தித்த பிறகு கதையின் விறுவிறுப்பு கூடுகிறது. ஆங்காங்கே வாழ்வியல் தத்துவங்கள் அடங்கிய ஓரிரு வசனங்கள் தென்படுகின்றன.


ஏனோ paulo coelho வின் The Alchemist கதை நினைவுக்கு வந்ததை தடுக்க முடியவில்லை, கூடவே Gabriel Marquez ன் சர்ரியலிசம் போன்று இல்லாமல், மாயஜால குணங்கள் என்பதை விடவும், தூய்மையான் சர்ரியல் பணியாக இருக்கிறது Easterine kire ன் இப்புத்தகம்.


தொய்வில்லாமல் பயணிக்க வைக்கிறது Kire ன் கதை சொல்லும்‌ பாங்கு, எளிய மொழியில், அதே நேரத்தில் இந்தியாவின் வடகிழக்கு பகுதியிலிருந்து வந்திருக்கும், enriched language ஆகவும் இருக்கிறது.


காடுகளில் பயணித்து இராதவர்களுக்கு உறுதியாக புதிய அனுபவமாக இருக்கும்.


காட்டு வழி பயணத்தையும் கடந்து Vilie & Ate வழியே ஒரு நன்னெறியை கடத்துகிறார் நூலாசிரியர். Heart - stone has spiritual power... Has to felt from insight  அதை யாராலும் சூறையாட முடியாது என்பது இறுதியாக சொல்லப்படும் செய்தி.


Zote அவ்வளவு குரூரம் நிறைந்தவளாக மாறுவதற்கு காரணம் அன்பு காட்டப்படாமல் கிராமத்து மக்களால் ஒதுக்கப்படுவதே காரணம், அதே நேரத்தில் தனது தங்கை Ate டிடமிருந்து கொள்கை ரீதியாக வேறுபட்டாலும், அவளை‌ப் போற்றி பாதுகாத்தது நெகிழச் செய்கிறது.


Zote ன் மரணம், நம்மையும் கொஞ்சம் அசைத்துப் பார்க்கிறது என்பதே உண்மை.


Vilie, பயணவழியே திரும்பும்‌போது Nettle Forest ல் சந்தித்த பெண் idele, நேபாளியான கிருஷ்ணா மற்றும் அவரது மனைவி இறந்தது என ஆங்காங்கே காடுகளில் வாழும் மனிதர்களின் பாதுகாப்பற்ற வாழ்வியலை சொல்லி செல்கிறது.


காலங்காலமாக, மனிதனின் மண்ணாசைக்கும், பொன்னாசைக்கும் பலியாகும்‌ இயற்கையையும், அதை சார்ந்த மனிதர்களின்‌ பாடுகளையும் கதையில் உணரமுடிகிறது.


செல்லும் இடத்தில் ஆங்காங்கே குடில் அமைக்கவும், சமைத்து உண்ணவும், நீர் தேடவும், கானூயிர்களோடு போராடுவதுமென தினமுமே வாழ்தல் என்பது போராட்டமாக இருக்கிறது, அதுவே மன உறுதியையும் தருகிறது காட்டு வாழ்வில். 


எந்த இடத்திலும் வனதேவதை பற்றியோ, காடுகளில் வாழ்வோரின்‌ கொண்டாட்டங்கள் பற்றியோ ஏதும்‌ குறிப்பில்லை என்பது சற்றே ஏமாற்றம்.


பூமி தாயாக, வானம் தந்தையாக, எனது ஆன்மா பெரிது என உத்வேகம் தரும் சொற்களும், மூதாதையர்களின் பெயர் சொல்வதும் காட்டுவாழ் மனிதர்களின் நம்பிக்கையும், மனோதைரியமுமாக இருக்கிறது.


தேன், இலை, மரப்பட்டை, வேர் பற்றி இன்னும் விரிவாக 

சொல்லியிருக்கலாம்.


இரவு நேரத்தில் நரி, were tiger ( புலியின் ஆன்மா) பற்றிய பதிவுகளில்‌ அவை எழுப்பும்‌ ஒலியைப் பற்றிய பதிவு மட்டுமே இருக்கிறது.


 இரவில் எந்த உயரத்தில் விலங்களின் கண்கள் ஜொலிக்கிறதோ, அதைக்கொண்டு, என்ன விலங்கென்று இனங்காணுவது பற்றி சொல்லியிருந்தால் இன்னும்‌கூட கதையின் pep கூடியிருக்கும்.


தூய்மையான செய்கையும், குணமும் கொண்டவர்களுக்கு மட்டுமே Heart stone கிடைக்கும் என்பது, இயற்கை தவறுகளை ஒரு போதும்‌ மன்னிப்பதில்லை என்பதாக புரிந்துக் கொண்டேன்.


Vilie ன் தன்னந்தனியான பயணத்தின்‌போது ஏற்படும்‌ காய்ச்சல், காயங்கள் அதற்கான மருந்துகள் லேசாக சொல்லப்பட்டிருக்கிறது.


Saturday market, மலைக்கும் கிராமத்திற்கும் இடையேயான வயல்வெளி என சரியான புவியமைப்பு சொல்லப்பட்டிருக்கிறது.


Kani மற்றும் அவரது மனைவி ‍Subhale மனதில் நிற்கிறார்கள்.

மூங்கிலில் மீன்‌ வேகவைக்கும் மணம், நம்மையும் சாப்பிட அழைக்கிறது.


ஒரே ஒரு இடத்தில்‌ மட்டும் மழைக்கான அறிகுறியை சொல்கிறார், விறகுகள் சேகரிக்கும்போது மட்டும் காய்ந்த சுள்ளிகளை சேகரிப்பதாக கூறும்போது, மனம் தானாகவே வலிந்து, ஒரு மழையை தேடிக்கொள்கிறது.


Ate ன் தோளில் பதிந்த புலியின் கால் நகம், Zote மற்றும்‌ Ate ன் குடுமிபிடி சண்டைகள் அச்சமூட்டுகின்றன.


Ate, Heart -stone ஐ வைத்து Ate, Vilie க்கு ஏன் ஏதும் செய்யவில்லை? என்ற கேள்வி எழுகிறது. சற்று தாமதமாகவே Vilie ன் நிலை அவரது உறவினருக்கு தெரிவிக்கப்படுகிறது என்பதை காரணமாக இருக்குமோ?


Vilie ன் வீடும் அதன் இடமும் என்னுள்‌ ஒரு காட்சியை உருவாக்கி இருக்கிறது... அதில் இன்னமும் Vilie வாழ்ந்து கொண்டிருக்கிறார்... அப்படியே வாழ்ந்துக்கொண்டு இருக்கட்டுமே...


Kudos Easterine kire. Excellent  narration and enchanting journey through forest...surreal journey.


அன்புடன்

- கோ.லீலா.


No comments:

Post a Comment