Saturday 25 August 2018

கடைமடை சேரா மழை.

கொட்டும் மழை
கோடி போய்
சேரலையே
கடைகோடி
போய் சேரலையே
விதைக்காம விதை
நெல்லு முளைச்சி போச்சி
விலைப் போகாம
நெல்லும் இங்கே
தங்கிப் போச்சு
கால்வயிறு சுருங்கி
மழை நனைஞ்ச காகிதமா
ஆகிப்போச்சு
பொங்க பானை
மேலே பூனை வந்து
உறங்கியாச்சு.
தண்ணீர் திறந்து விட்டு
கண்ணீர் சிந்தும் எம்மனசு
உறக்கம் மறந்து நாளாச்சி
சட்டத்தை மாத்திடதான்
எங்கிட்ட இல்லையே ஆட்சி.
-கோ.லீலா.

No comments:

Post a Comment