Saturday 28 April 2018

அறம்-1



எழுத்தாளர் ஜெயமோகன் குறித்து என் நண்பர்கள் சிலரிடம் விவாதம் செய்தது உண்டு......என்றாலும் படைப்புகளை எழுத்துக்களை பொதுப்பார்வையோடு படிக்கும் பழக்கமும் எனக்கு உண்டு.கடந்த பலமாதங்களாக இடையறாத பணிகளுக்கிடையே படித்தல் என்பது சற்று விலகியே இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.


சற்று ஓய்வு கிடைக்க "அறம்" படித்துக் கொண்டிருக்கிறேன்.ஒரே நாளில் படித்துவிடக்கூடிய நபர் தான் நான் எனினும் வேலையின் காரணமாக எட்டு கதைகளை மட்டும் படித்திருக்கிறேன்.


அறம் என்றால் என்ன? என்றொரு கேள்வி முதலில் தோன்ற படிப்பதற்கு முன்பாகவே சில சிந்தனைகளை தூண்டி விட்டது தலைப்பு.


"அறன் எனப்படுவது யாதெனின் பிறர்கின்ன செய்யாமை"

என்ற வரிகளே முதன்மையாக தோன்றுகிறது.

எனில் அறம் யாவருக்கும் பொதுவானதாக இருக்கிறதா? என்ற பல்வேறு கேள்விகளுடன் புத்தகத்தை திறக்க.

முதல் கதை "அறம் பாடுதல்" வகை.


படைப்பாளி அறம் பாடுதல் அழிவுக்கான அறமல்லவா?

அழிவை தடுத்துவிட படைப்பவனின் மன சஞ்சலம் வாழவிடாது என்பதுணர்ந்த பதிப்பாளரின் மனைவியின் போராட்டம் ஒரு வகை அறம்.


மதுரைய எரித்த கண்ணகி முதல் அறம் ஆச்சி வரை பெண்கள் நிலைநாட்டிய அறம்.


தார் சாலையில் உச்சி வெயிலில் அமர்ந்து இருந்ததை..


"சேலை பாவடையோட தோலும் சதையும் வெந்து,தாரோட சேர்ந்து ஒட்டியிருந்துச்சுன்னு சொன்னாங்க" என்ற வரிகள் காலங்காலமாய் ஆண்களால் குடும்பத்திற்கு,தேசத்திற்கு வரும் சாபங்களை பெண்கள் தானே போக்கி கொண்டிருக்கிறார்கள் அறம் செய்து.


பெண்களே அறத்தை கிழிக்கும் போது யார் அதை சரி செய்வது.........?


-தொடரும்.

No comments:

Post a Comment